News April 21, 2025
ஏப்ரல் 21: வரலாற்றில் இன்று!

▶ தேசிய குடிமை பணிகள் தினம். ▶ 1926 – மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள். ▶ 1964 – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள். ▶ நாடக, திரைப்பட நடிகர் டி.ஆர். மகாலிங்கம் நினைவு நாள். ▶ 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள். ▶ 1987 – இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 106 பேர் உயிரிழப்பு.
Similar News
News December 4, 2025
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: மீளுமா இங்கிலாந்து?

2-வது ஆஷஸ் டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த ENG, BAZBALL அணுகுமுறையை கைவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிங்க் பால் பயன்படுத்தி நடக்கும் இந்த பகல்-இரவு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் ஆஸி., 14 பிங்க் பால் டெஸ்ட் விளையாடி ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. புதிய யுக்தியுடன் ENG களமிறங்கினால், அது ஆஸி.,க்கு சவலாக அமையக்கூடும்.
News December 4, 2025
குளு குளு தென்றலாக பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாவில், குளிர் காலத்தை ரசித்து மகிழும் புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில்லென்ற மூக்கு, குளிர்கால ஃபேஷன், ஹாட் சாக்லேட், சூரியனின் அரவணைப்பும் என்று அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குளு குளு தென்றலாக குளிர்காலத்தை என்ஜாய் செய்யும் பூஜாவின் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 4, 2025
அணு பேரழிவு நடந்த இடத்தில் செழித்து வளரும் உயிர்!

உலகின் மிகமோசமான அணு உலை பேரழிவு நடந்த பகுதியாக உக்ரைனின் செர்னோபில் உள்ளது. இங்கு நிலவும் அணு கதிர்வீச்சால் இன்று வரை மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக கருதப்படும் நிலையில், கருப்பு பூஞ்சை எனும் ஒரே ஒரு உயிர் மட்டும் செழித்து வளர்ந்து வருகிறது. பிற தாவரங்கள் எப்படி சூரிய ஒளியை வளர்ச்சிக்கான ஆற்றலாக மாற்றுகிறதோ, அதேபோல், இந்த பூஞ்சைகள் கதிர்வீச்சை ஆற்றலாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


