News April 8, 2025
ஏப்ரல் 08: வரலாற்றில் இன்று

➤1277 – வேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. ➤1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது. ➤1906 – அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார். ➤1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது. ➤ 2000 – அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.
Similar News
News September 14, 2025
LCU-ல் தொடர்ந்து நடிப்பேன்: சாண்டி

LCU-ல் தனது கதாபாத்திரம் தொடரும் என சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார். லியோ படத்தில் தனது கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு இருந்தாலும், ப்ரீக்வெல் படங்களில் தொடர்வேன் என்று அவர் கூறியுள்ளார். தானும், மிஷ்கினும் வேறு LCU படங்களில் நடிப்போம் என்றும் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும் எனவும் பேசினார். லியோ கதை சொல்லும் போதே லோகேஷ் இதை உறுதிப்படுத்தியதாகவும் சாண்டி கூறினார்.
News September 14, 2025
இங்கி.ல் சீக்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இங்கிலாந்தில் சீக்கிய பெண் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 20 வயதான சீக்கிய பெண்ணை வழிமறித்த இருவர், நீ இந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல, வெளியே செல் எனக் கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வெள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
News September 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 458 ▶குறள்: மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. ▶பொருள்: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.