News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News January 2, 2026
இன்று முதல் இலவச தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (ஜன.2) முதல் ஜன.8-ம் தேதி வரை நேரடி இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு டோக்கன் இல்லாமலேயே நேரடியாக வந்து சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம். இலவச தரிசனம் என்பதால், நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.
News January 2, 2026
ஆதவ் அர்ஜுனா ஓடி ஒளிந்தார்: மா.சு

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஜீரோ என்ற நிலையில் உள்ளது என மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்நிலையில், இவ்வாறு பேசுவதற்கு மா.சு.,க்கு அறிவு இருக்கா இல்லையா என ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக மா.சு.,விடம் கேட்டதற்கு, கரூரில் 41 பேர் இறந்தபோது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த அறிவாளிகள் எல்லாம் தன்னை அறிவாளி இல்லையென பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
News January 2, 2026
மார்கழி வெள்ளிக்கு மங்களகரமான கோலங்கள்!

குனிந்து எழுந்து கோலம் போடுவது முதுகெலும்பு, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. அதேபோல வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும், செல்வத்தையும் ஈர்ப்பதாக (மகாலட்சுமி கடாட்சம்) முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சில எளிய மார்கழி கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை மேலே SWIPE செய்து பார்த்து வீட்டில் முயற்சிக்கவும்.


