News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News January 8, 2026
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750-ஐ வழங்க வேண்டும்; ஐகோர்ட்டு தீர்ப்பின் படி 2.57 காரணியால் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
News January 8, 2026
அவர் வக்கீல் தானே பண்ணட்டும்: KN நேரு

ED ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் KN நேருவுக்கு எதிராக ₹1,020 கோடி ஊழல் புகாரை அதிமுக சுமத்தியுள்ளது. மேலும் அவர் மீது FIR பதிவு செய்யக் கோரி சென்னை HC-ல் MP இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் வக்கீல் தானே, அவர் கோர்ட்டுல பதிவு பண்ணட்டும் என்று அமைச்சர் நேரு அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
News January 8, 2026
ஏன் ரஜினி 50 நடக்கவில்லை?

நேற்று ‘பாக்யராஜ் 50’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தவறில்லை, பாராட்டுக்குரியதே. கமலின் 60-ம் ஆண்டை, சத்யராஜ் 25-ம் ஆண்டுகளை கொண்டாடிய இந்த கோலிவுட், இன்னும் ஏனோ ரஜினி 50-ஐ கவனிக்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். ரஜினியை அணுகிய போது, அவர் மறுத்துவிட்டதாக கூறப்பட்டாலும், ஏன் கோலிவுட் அவரை Convince செய்ய முயலவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.


