News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 26, 2025
பீர் பிரியர்களுக்கு.. HAPPY NEWS

பீர் குடித்தால் உடலுக்கு நல்லதல்ல என்பது பொது அறிவுரை. அதை மாற்றும் விதமாக Beer-ஐ வைத்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளார் USA ஆய்வாளர் கிறிஸ் பக். ஈஸ்ட் செல்களை வைரஸ் துகள்களுடன் இணைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தொழில்நுட்பத்தை முயற்சித்துள்ளார். இந்த பீரை குடித்து பரிசோதித்ததில், உடலில் Antibodies உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் இது ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.
News December 26, 2025
தங்கம் விலையை குறைக்க களத்தில் குதித்த பெண்கள்!

உண்மைதான்.. அரியலூர், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஞ்சள் தாலிக்கயிறை கையில் வைத்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி விலை உயர்ந்து கொண்டே சென்றால் பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்வது என கேள்வி எழுப்பிய அவர்கள், தங்க விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உங்கள் கருத்து என்ன?
News December 26, 2025
BREAKING: விஜய் கட்சி சின்னம் இதுவா..!

2026 தேர்தலில் தவெகவிற்கு என்ன சின்னம் வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்டோ, விசில் உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் தவெக வழங்கியிருந்தது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு ’அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு. ஆனால் இப்போது சொல்லமாட்டோம்’ என KAS பேசியது குறிப்பிடத்தக்கது.


