News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 28, 2025
உள்ளூர் போட்டிகளிலும் கெத்து காட்டிய விராட் கோலி

சர்வதேச போட்டிகளை தொடர்ந்து, உள்ளூர் தொடர்களிலும் விராட் கோலியும் சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது விஜய் ஹசாரே கோப்பையில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார். டெல்லி அணிக்காக VHT-ல் விளையாடி வரும் அவர் நடப்பு சீசனில் களம் கண்ட 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 2027 WC-ல் பங்கேற்பதற்காக இப்போது உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.
News December 28, 2025
தமிழின் பெருமை, இந்தியாவின் ஒற்றுமை: PM மோடி

உலகின் பழமையான மொழியான தமிழை கற்க, நாட்டின் பிற பகுதிகளிலும் ஆர்வம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். மன்கி பாத் உரையில், இதுவே மொழியின் வலிமை, பாரதத்தின் ஒற்றுமை என பாராட்டினார். இந்தாண்டு தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் என இந்தியா எல்லா துறைகளிலும் முத்திரையை பதித்துள்ளதாக கூறினார். ஆபரேஷன் சிந்துார் நாட்டின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News December 28, 2025
அஜிதா விஜய்யை மதிக்கவில்லை: பெண் நிர்வாகி

<<18684988>>அஜிதா<<>> விஜய்யின் காரை வழிமறித்தது, அவருக்கு மதிப்பளிக்காமல் செய்த செயல் என கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு கூறியுள்ளார். இதனால் விஜய் பெண்களை அலட்சியப்படுத்துகிறார் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாக கூறிய அவர், தலைமையிடம் பேசியிருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்றார். மேலும், தலைவரின் காரை மறிப்பது ஒரு நிர்வாகிக்கு அழகல்ல என்றும் சாடியுள்ளார்.


