News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News November 27, 2025
இவர்தான் #Thalaivar173 டைரக்டரா?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி, வெளியேறிவிட்ட நிலையில், அந்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி, கதிர் ஆகியோரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
News November 27, 2025
அதி கனமழை… மக்களே வெளியே வராதீங்க

வங்கக்கடலில் சற்றுநேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
News November 27, 2025
உதயநிதிக்கு CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்

கொள்கைப் பற்றோடு உழைப்பால் உயரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். DCM பற்றி கட்சியினர் பாராட்டுவதாக கூறிய அவர், அதை கேட்கும்போது தந்தையாக மட்டுமல்லாமல் தலைவனாகவும் மகிழ்வதாக தெரிவித்துள்ளார். மேலும், காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனாக திகழ வேண்டும் என DCM-க்கு அட்வைஸ் செய்துள்ளார்.


