News April 5, 2025

ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

image

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News December 30, 2025

SKY எனக்கு அடிக்கடி மெஸேஜ் செய்வார்: பாலிவுட் நடிகை

image

இந்திய டி20 கேப்டன் SKY குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியது பேசுபொருளாகியுள்ளது. பேட்டி ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களில் SKY தனக்கு அடிக்கடி மெஸேஜ் அனுப்பியதாகவும், ஆனால் தற்போது இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர்களை டேட் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது கருத்துக்கு SKY இன்னும் எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை.

News December 30, 2025

திமுக அரசுக்கு பயம்: அன்புமணி

image

நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வே நடத்த இல்லையா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான தனது அறிக்கையில், சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என திமுக அரசு அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 30, 2025

நடிகர் மோகன்லால் வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

image

மலையாள நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி(90) காலமானார். கொச்சி, எலமாக்கரா பகுதியில் உள்ள இல்லத்தில் தனது கடைசி காலத்தை கழித்துவந்த அவர், நரம்பியல் சார்ந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சாந்தகுமாரி உயிரிழந்துள்ளார். தாயார் இறந்த செய்தியறிந்து நடிகர் மோகன்லால் அங்கு விரைந்துள்ளார்.

error: Content is protected !!