News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 11, 2025
ஐபிஎல் ஏலம்: ஜாக்பாட் அடிக்கப்போவது யார்?

வரும் 16-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்தின் முதல் செட்டில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கான்வே, கேமரூன் கிரீன், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், பிரித்வி ஷா, ஜேக் பிரேஸர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில், கேமரூன் கிரீன் அதிக தொகைக்கு ஏலம் போவார் என ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். CSK யாரை வாங்கணும்? கமெண்ட்ல சொல்லுங்க
News December 11, 2025
யூடியூப்பை பார்த்து ஆபரேஷன்.. பெண் துடிதுடித்து மரணம்!

உ.பி.,யில் மனைவி வயிற்று வலியால் துடிக்க, கணவர் கிளினிக் ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறார். கிட்னியில் கல் இருப்பதாக கூறிய டாக்டர்கள், அவருக்கு ஆபரேஷன் செய்கின்றனர். youtube பார்த்து சிகிச்சை செய்த டாக்டர் பிரகாஷ், மதுபோதையில் அப்பெண்ணின் வயிற்று நரம்புகளை துண்டிக்க, அவர் உயிரிழந்துள்ளார். ஃபீஸாக ₹20,000 பணத்தையும் கொடுத்து, மனைவியையும் இழந்து தவிக்கிறார் கணவர். டாக்டர்களே இப்படி இருந்தால்…?
News December 11, 2025
கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குக: தமிழச்சி MP

Ex CM கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என MP தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பிற இந்திய மாநிலங்களுக்கு கருணாநிதி முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என குறிப்பிட்டார். மேலும், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கருணாநிதி சாம்பியனாக திகழ்ந்தார் என்றும் கூறினார்.


