News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 12, 2025
தீபத்தூண் அல்ல.. சர்வே தூண்: கோயில் செயலர்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே தூண் தான் என சொல்வதற்கான ஆதாரங்கள் குறித்து மதுரை HC நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு கோயிலின் செயல் அலுவலர், மலை மீது இருப்பது கிரானைட்டால் ஆன தூண் தான் என்றும் பதிலளித்தார். அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலைகளை அளப்பதற்காக வைக்கப்படும் சர்வே தூண் மட்டுமே எனவும் கூறியுள்ளார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை திங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
ரஜினியை வாழ்த்திய நட்சத்திரங்கள்.. (PHOTOS)

1950-ல் பிறந்து, 50 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி நினைவு கூர்ந்துள்ளனர். திரைநட்சத்திரங்கள் பகிர்ந்த அரிய போட்டோஸை மேலே SWIPE செய்து பார்க்கவும்..
News December 12, 2025
வெற்றி பெற வித்தை செய்யணும்: அண்ணாமலை

2026 தேர்தலில் 3-வது அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக மேலும் வளர்ச்சி பெற இன்னும் பல வித்தைகளை செய்ய வேண்டும் என்றார். ஒவ்வொரு கட்சியும் தங்களின் இடத்தை தக்க வைக்கவும், முன்னேறவுமே முயற்சிப்பார்கள் என்றார். அமித்ஷா உள்ளிட்டோருடன் மூடிய அறையில் பேசியதை வெளியில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.


