News April 5, 2025

ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

image

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News December 17, 2025

எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்பதே தெரியாது: VJS

image

‘அரசன்’ படத்தில் தன்னுடைய கேரக்டர் என்ன, எத்தனை நாள் ஷூட்டிங் என எதுவுமே தனக்கு தெரியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்த கேரக்டர் எழுதும்போது உங்க ஞாபகம் வருது சேது, எழுதட்டுமா என வெற்றிமாறன் சார் கேட்டார். உங்க ஞாபகத்தில் வருவதே நல்ல விஷயம், எழுதுங்க சார் என ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும், அனைத்தையும் வெற்றி சார் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 17, 2025

அஜித்குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், A7 ஆக <<18544051>>DSP<<>> சண்முகசுந்தரம் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி மதுரை HC அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதன் மீதான விசாரணையின் போது, DSP சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்கவுள்ளதாக CBI கூறியுள்ளது. இதனால், விரைவில் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 17, 2025

IND vs SA: இன்று போட்டி நடக்குமா?

image

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. ஆனால், அங்கு அதீத பனிமூட்டம் இருப்பதால், போட்டி தொடங்குவது தாமதமாகி வருகிறது. 7:30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த பிறகு, இன்றைய போட்டி நடக்குமா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்த போட்டி ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

error: Content is protected !!