News April 2, 2025
ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
Similar News
News February 19, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம். தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட நுண்கலை மற்றும் நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் கலை விருதை வருகிற பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-27269148 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார்.
News February 19, 2026
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள்

சட்டமன்ற தேர்தல் களம் தினந்தோறும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் யாரும் எதிர்பாராத வண்ணமாக <<19181870>>திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது<<>>. ஓராண்டுக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் ஒன்றாக இருந்த தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தற்போது எதிர் அணியில் நின்று அதிமுகவை எதிர்கொள்ள உள்ளன. புதிய தமிழகம் கட்சி மட்டும் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
News February 19, 2026
டிரம்ப் உத்தரவுக்கு காத்திருக்கும் US படைகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. டிரம்ப் கிரீன் சிக்னல் காட்டினால் இந்த வார இறுதியில் தாக்குதல் தொடங்கலாம் என CNN செய்தி வெளியிட்டுள்ளது. 2003 ஈராக் போருக்கு பிறகு தற்போதுதான் மத்திய கிழக்கில் பெரிய அளவில் விமானம் & கப்பல் படைகளை அமெரிக்கா குவித்துள்ளது. தற்போது டிரம்ப் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


