News April 2, 2025

ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

image

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

Similar News

News February 1, 2026

டீச்சருக்கு 161 ஆண்டுகள் சிறை தண்டனை.. அதிர்ச்சி பின்னணி!

image

ஆட்டிசம் பாதித்த சிறுவனை (10) பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டீச்சருக்கு 161 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சிறப்பு பள்ளியில் படித்து வந்த சிறுவனை, ஆசிரியர் சந்தோஷ் குமார்(56) பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவன் எழுதியும், வரைந்தும் காட்டியுள்ளான். பெற்றோர் அளித்த புகாரில், கேரள விரைவு நீதிமன்றம் ₹87,000 அபராதத்துடன், 161 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

News February 1, 2026

ரசிகர்களை மட்டுமே விஜய் நம்பவில்லை: அருண்ராஜ்

image

ஊழல் சக்தியுடன் விஜய் கூட்டணி அமைக்காமல் இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விஜய் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வரவில்லை என்றும் மக்களின் பேராதரவுடன்தான் களத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் கொள்கை முடிவு என்றும், கூட்டணி கட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

News February 1, 2026

இந்திய ரூபாய் தாளின் ரகசியம் தெரியுமா?

image

இன்றைய தினம், மத்திய பட்ஜெட் மீதுதான் பலரின் கவனம் இருக்கும். இந்நிலையில், ரூபாய் நோட்டு குறித்த தகவல் ஒன்றை அறிவோம். ரூபாய் நோட்டு காகிதத்தால் ஆனது கிடையாது. லினன் & பருத்தியால் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. 75% பருத்தி, 25% லினன் என்ற காம்போவில் உருவாக்கப்பட்டு, அவை ஜெலட்டின் பிசின் கரைசலுடன் கலக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே ரூபாய் நோட்டுகள் நீண்ட காலம் கிழியாமல் இருக்கின்றன. SHARE IT.

error: Content is protected !!