News April 2, 2025
ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
Similar News
News February 4, 2026
கல்கி-2-ல் 2 கெட்டப்பில் அசத்தும் கமல்

பிரபாஸின் ‘கல்கி -2’ படத்தில் கமலுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றிய கமல், இரண்டாம் பாகத்தில் கிட்டதட்ட 90 நிமிடங்கள் வருவாராம். அதுமட்டுமல்லாமல், 2 கெட்டப்களில் கமல் இதில் நடிக்கிறார். மேலும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.
News February 4, 2026
அஜித் பவார் மரணத்தில் சந்தேகத்தை கிளப்பிய MP

அஜித் பவாரின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என உத்தவ் சிவசேனாவின் MP அர்விந்த் சவாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என லோக் சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸையும் அவர் கொடுத்துள்ளார். ஏற்கெனவே அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என மம்தா பானர்ஜியும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.
News February 4, 2026
பலுசிஸ்தான் தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் பாக்.,

பலுசிஸ்தான் விடுதலைப்படையின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு இப்போது பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 40% நிலப்பரப்பை கொண்ட பலுசிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டுவரமுடியாமல் அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது. இதனிடையே பலுசிஸ்தானில் அதிகரித்து வரும் தாக்குதல்களைத் தடுப்பதில் ஊனமுற்றது போன்ற நிலையில் ராணுவம் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆசிப் ஒப்புக்கொண்டார்.


