News March 30, 2024
அரசு பள்ளிகளுக்கு ஏப். 1 முதல் ஸ்மார்ட் போர்டு

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளன. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ஏப். 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்படவுள்ளன. வரும் கல்வி ஆண்டில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
மலைபோல் குவிந்த வாழ்த்துகளுக்கு ரஜினி நன்றி

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை பறைசாற்றி, திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், EPS, கமல், மோகன்லால், இளையராஜா உள்ளிட்ட அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 15, 2025
முடிவுக்கு வந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம்!

சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அரசு தெரிவித்துள்ளது. <<17403280>>காலை உணவு, பணியின்போது மரணித்தால் ₹10 லட்சம் காப்பீடு<<>>, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் 6 அறிவிப்புகளுக்கு போராட்ட குழுவினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பணி நிரந்தரம் வேண்டும், தனியார்மயமாக்கல் வேண்டாம் என கடந்த 2 வாரங்களாக தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பேசுபொருளானது கவனிக்கத்தக்கது.
News August 15, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪ரத்தமும் <<17409691>>தண்ணீரும் <<>>ஒன்றாக ஓடாது: சுதந்திர தின விழாவில் PM மோடி ஆவேசம்
✪சென்னை <<17410130>>கோட்டையில் <<>>கொடியேற்றிய CM ஸ்டாலின்
✪கொட்டும் மழையில் <<17411614>>தேசியக் <<>>கொடிக்கு மரியாதை செலுத்திய ராகுல்
✪தொடர்ந்து <<17411085>>சரியும்<<>> தங்கம்: சவரனுக்கு ₹80 குறைவு
✪ஆசியக் கோப்பை: <<17409302>>PAK <<>>மேட்ச்சை புறக்கணிக்க ஹர்பஜன் வலியுறுத்தல்
✪ அரங்கம் அதிரட்டுமே.. முதல் நாளில் ₹140 கோடி வசூலித்த ‘கூலி’