News August 24, 2024
பள்ளி, கல்லூரி மாணவர்களின் திட்டத்திற்கு ஒப்புதல்

11, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெல்லோஷிப் வழங்கும் ‘விக்யன் தாரா’ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு ₹10,579 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவன & மனித திறன் மேம்பாடு; ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; புதுமை, தொழில்நுட்ப மேம்பாடு & வரிசைப்படுத்தல் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
Similar News
News November 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. அரசு முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் ₹1 அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்ட மெசேஜ் உங்களுக்கு வந்தால், நீங்கள் திட்டத்தில் புதிதாக இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த முறையும் அரசு இதேபோல் தான் செய்தது. யாருக்கெல்லாம் மெசேஜ் வந்திருக்கிறது?
News November 24, 2025
6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள்: அர்ச்சனா பட்நாயக்

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு SIR படிவங்களை அதிகம் வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுவரை 6.16 கோடி பேருக்கு நேரடியாக SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் SIR படிவங்களில் பெயர் இருக்கும். மேலும், வரும் டிச.4-க்கு பிறகு SIR பணிகள் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
சற்றுமுன்: விலை புதிய உச்சம் தொட்டது.. மக்கள் அவதி

முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று முருங்கைக்காய் கிலோவுக்கு ₹100 உயர்ந்து ₹400-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவுக்கு ₹10 முதல் ₹20 வரை உயர்ந்துள்ளது. மழையால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வால், குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


