News August 3, 2024
நெல்லைக்கு புதிய ஏ.பி.ஆர்.ஓ நியமனம்

செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இருவர் நேற்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் நெல்லைக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
நெல்லை: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

நெல்லை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
நெல்லை: மாடு குறுக்கே வந்ததால் தொழிலாளி பலி!

தச்சநல்லூரை சேர்ந்தவர் கணேசன் (55). கார் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் பணி முடிந்து மணிமூர்த்தீஸ்வரம் வழியாக பைக்கில் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். மாநகரப் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
நெல்லையில் தொழிலாளி தற்கொலை

சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45) சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை ஏக்கத்தில் இருந்த முத்துக்குமார் விஎம் சத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


