News March 21, 2024
தேர்தல் ஆணையர் நியமனம்: மனு தள்ளுபடி

புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனத்துக்கு தடை கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையர்களாக எஸ்.எஸ்.சாந்து, ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டனர். இதற்கு தடை விதிக்கக்கோரும் மனுக்கள் மீதான விசாரணையில், புதிய சட்டத்தில் அரசின் ஆதிக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
Similar News
News November 2, 2025
இந்த தீர்ப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

‘இனிமேல் இந்த மாதிரி வாழ்க்கைல எப்பவும் நினச்சி கூட பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் தான் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு தோன்றியிருக்கும். வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
News November 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
News November 2, 2025
மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.


