News August 25, 2024

Apply Now : ஆக., 28 வரை காலக்கெடு நீட்டிப்பு!

image

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 3,955 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுவை ஆக., 28ஆம் தேதி வரை IBPS ஆணையம் நீட்டித்துள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். வயது வரம்பு: 20-30. கல்வி தகுதி: Any Degree. விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ₹180/-. கூடுதல் தகவல்களுக்கு IBPS என்ற இந்த இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

Similar News

News March 7, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து தங்கமணி விலகுகிறாரா?

image

EPS – தங்கமணி இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணி உடனான மோதல்போக்கு காரணமாகவே, EPS தனது நாமக்கல் பரப்புரையை தாமதமாக நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தங்கமணி அதிருப்தியில் இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கடந்தாண்டே செய்தி வெளியானது. ஆனால், இதனை மறுத்து அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

News March 6, 2026

விவாகரத்து சர்ச்சை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்

image

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது SM-ல் பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு விஜய் ஆளாகியுள்ள நிலையில், நேற்றிரவு முதல் அதிகளவில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. மேலும், தவெக தொண்டர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதையும் காண முடிகிறது. அதேநேரம், <<19309273>>விஜய்க்கு ஆதரவாகவும்<<>> குரல்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்க கருத்து?

News March 6, 2026

தாமிரபரணியை கொலைக் கூடாரமாக்கிய திமுக: நயினார்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் 30 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வெளியான செய்தி பதைபதைக்கச் செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தாமிரபரணி நதிக்கரை பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் திமுக அரசின் ஒரே சாதனை என்றும் சாடியுள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சிதைத்த திமுக அரசை மக்கள் நிராகரிப்பர் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!