News July 2, 2024
1.48 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் ஏற்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமானப் பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இதில், விடுபட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்ட நிலையில், 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 15 முதல் அவர்களது வங்கிக் கணக்கிலும் ₹1000 வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 18, 2025
உங்கள் போன், உங்களை ஒட்டுக் கேட்பது தெரியுமா?

நீங்கள் எதைப் பற்றியாவது பேசியபின், உங்கள் சோஷியல் மீடியா, இணைய தேடல்களில் அது தொடர்பான விளம்பரங்கள் வருவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு காரணம், நீங்கள் பேசுவதை போன் ஒட்டுக் கேட்பது தான் என்கின்றனர் டெக் நிபுணர்கள். உங்கள் பேச்சை கேட்கும் ஆப்கள், அதிலுள்ள Keywords-ஐ உள்வாங்கி, அதற்கேற்ப விளம்பரங்களை வழங்குகிறதாம். இதை தவிர்க்க, போனில் உள்ள ஆப்களில் மைக் பர்மிஷனை Turn off செய்ய வேண்டும்.
News November 18, 2025
விஜய் + அதிமுக கூட்டணி… முடிவை தெரிவித்தார்

அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என அண்மைக்காலமாக யூகங்கள் எழுந்து வருகின்றன. பாஜக இருக்கும் கூட்டணியில் தாங்கள் இடம்பெறமாட்டோம் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தவெக விரும்பினால் அவர்களுடன் கூட்டணி குறித்து EPS பேசுவார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
News November 18, 2025
தமிழ்நாட்டில் இவ்வளவு தங்கம் இருக்கா?

தங்கத்தை தமிழர்கள் ஒரு முதலீடாகவோ அல்லது அந்தஸ்தின் அடையாளமாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, ஆபத்தில் உதவும் சேமிப்பாக கருதுகிறார்கள். அதனால் தான் சிறுக சிறுகவாவது தங்கத்தை வாங்கிட விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் உள்ள மொத்த தங்கம் எவ்வளவு தெரியுமா? 6,720 டன் தங்கம்! இது அமெரிக்க அரசின் தங்க இருப்புக்கு சமமானதாகும். ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளின் தங்க இருப்பைவிட அதிகமாம்.


