News April 10, 2025
இனி ஆப்பிள் ஒன்றும் NO.1 இல்லை!

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அந்தஸ்தை ஆப்பிள் இழந்துள்ளது. கடந்த 4 நாள்களாக அந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்ததால், அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் குறைந்துள்ளது. ஆப்பிளின் மூலதனம் $2.59 ட்ரில்லியனாக இருக்க, அதை ஓவர்டேக் செய்த மைக்ரோசாஃப்ட் $2.64 ட்ரில்லியனாக உருவெடுத்துள்ளது. டிரம்பின் வரிவிதிப்பால், சீன உற்பத்தியை நாடி இருக்கும் ஆப்பிளின் பங்குகள் குறைந்துள்ளன.
Similar News
News November 21, 2025
மயிலாடுதுறை: ஆட்சியர் கொடுத்த அப்டேட்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெரும் பணி நடந்து வருகிறது. அனைத்து படிவங்களும் திரும்ப பெறப்பட்டு தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உரிய முறையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் கோரிக்கை, மறுப்புகள் பெறப்பட்டு இறுதிவாக்காளர் பட்டியல் 2026 பிப்.7-ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
3 மாதங்களுக்கு ஸ்ரேயஸ் பேட்டை தொடக்கூடாதாம்

மண்ணீரல் காயம் காரணமாக இந்திய ODI துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இம்மாத இறுதியில் நடைபெறும் SA-வுக்கு எதிரான ODI தொடர் மற்றும் டிசம்பரில் நடக்கும் NZ-க்கு எதிரான ODI தொடரில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
News November 21, 2025
நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

2021-ஐ போலவே 2026 பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.


