News May 14, 2024
கவுண்டமணிக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

நடிகர் கவுண்டமணிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கவுண்டமணியின் 5 கிரவுண்ட் நிலம், ₹65 லட்சத்தையும் அவரிடமே கொடுக்கும்படி அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலத்தைக் கவுண்டமணியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
Similar News
News March 15, 2026
9 டூ 5 ஜாப்: இதன் உண்மையான அர்த்தம் தெரியுமா?

9-5 என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலை அல்ல. 9 மணி நேர வேலை(1 மணி நேர Break), 5 நாள்கள் என்பதே அதன் உண்மையான அர்த்தம். 1926-ம் ஆண்டு USA-ல் ஹென்றி ஃபோர்டு 40 மணி நேர வேலை (5 நாள்கள் × 8 மணிநேரம்) என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தினார். 1948-ம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம் வரையறுக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இது நடைமுறைக்கு வந்தது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News March 15, 2026
தொகுதிப் பங்கீடு.. EPS எடுத்த முடிவு

அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை EPS அமைத்துள்ளார். அதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாளை முதல் கூட்டணி கட்சிகளுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. காங்கிரஸ், மமக, கொமதேக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2026
நடிகை த்ரிஷா பிரச்னை முடிவுக்கு வந்தது

<<19332195>> பார்த்திபன் – த்ரிஷா<<>> இடையே பிரச்னை உருவானது அனைவரும் அறிந்ததே. தற்போது, அவர்களுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக SM-ல் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், மும்பையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா, பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டிருப்பதுதான். இதனை பார்த்த நெட்டிசன்கள், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


