News May 1, 2024

நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை

image

நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், 2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால், தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, “மன்னித்து விடுங்கள் அப்பா. இம்முறையும் என்னால் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது” என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

Similar News

News January 27, 2026

சென்னையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

ஆப்கானில் புதிய சட்டம்.. வலுக்கும் எதிர்ப்பு

image

ஆப்கானில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் சர்ச்சையாக மாறியுள்ளது. இது மக்களை 4 வகுப்புகளாக பிரிப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த சட்டங்களின் படி, அறிஞர்கள் (முல்லாக்கள்), உயரடுக்கு (ஆட்சியாளர்கள்), நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம் என உள்ளது. முல்லாக்கள் தவறு செய்தாலும் தண்டனை இல்லை. ஆனால், இதர வகுப்பினருக்கு தண்டனை என்பதால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

News January 27, 2026

ஜன நாயகன் ரிலீஸ்.. வெளியானது முக்கிய தகவல்

image

‘ஜன நாயகன்’ வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவை சென்னை HC ரத்து செய்துள்ளது. இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி வழக்கறிஞர் பராசரனுடன் படக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. SC-ல் மேல்முறையீடு; தனி நீதிபதியிடம் மீண்டும் மனு தாக்கல் செய்வது அல்லது தணிக்கை வாரியத்திடம் மறு தணிக்கைக்கு செல்லலாமா என ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து படக்குழு விரைவில் முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!