News April 24, 2024
மக்களின் மேலும் ஒரு உரிமை பறிக்கப்பட்டது

சூரத்தில் காங்., வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என பாஜகவை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பைத் தகர்க்கும் ஒரு படியாக, மக்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், இந்தத் தேர்தல் அரசை தேர்ந்தெடுக்க மட்டுமல்ல, அரசியலமைப்பை காக்கவும் என்றார்.
Similar News
News January 20, 2026
‘ஜன நாயகன்’ மறு ஆய்வுக்கு கால தாமதம் ஆனது ஏன்?

‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கு உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு ஆய்வு செய்வது குறித்து எத்தனை நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மறு ஆய்வுக்கு 20 நாள்களில் குழு அமைக்க வேண்டும் என சென்சார் போர்டு விளக்கம் அளித்தது. மேலும் மறு ஆய்வு குழு சான்றிதழ் வழங்க மறுத்தால் ஐகோர்ட்டை நாடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
News January 20, 2026
PM KISAN திட்ட தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டம்!

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 (ஆண்டுக்கு ₹6,000) வழங்கி வருகிறது. அதனை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது, ₹9,000 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் PM KISAN திட்ட தவணைத் தொகையை உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம்.
News January 20, 2026
விஜய்யை சீண்டிய சிவி சண்முகம்

கார், பங்களா, வீடு தருகிறோம் என புதிதாக அரசியலுக்கு வந்த ஒருவர் கூறுகிறார். அதை ட்ரம்ப் கூட கொடுக்க மாட்டார் என விஜய்யை அதிமுகவின் சிவி சண்முகம் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், இன்றைக்கு கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர் என பலர் வந்தாலும், ஒரே எம்ஜிஆர் எங்கள் எம்ஜிஆர் மட்டும்தான் எனவும், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா என சிந்தித்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.


