News November 25, 2024
மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 11, 2026
PAK – BAN விமானங்களை இந்தியா அனுமதிக்குமா?

பாக்., – வங்கதேசம் இடையே விமான சேவை வரும் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இவை இந்திய வான் எல்லைக்குள் பயணிக்க வேண்டும் என்பதால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாக்., விமானங்கள் இந்திய வான் எல்லையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கும் அனுமதி மறுக்க பட்டால், 2,300 கி.மீ பயண தொலைவு 5,800 கி.மீட்டராகவும், பயண நேரம் 3 to 8 மணி நேரமாகவும் அதிகரிக்கும்.
News January 11, 2026
டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க முடியாதா?

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு தர விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், ஏற்கனவே ஒருவருக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட நோபல் பரிசை வேறு எவருக்கும் மாற்றவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நார்வே நோபல் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, 8 போர்களை நிறுத்தியதற்கு தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
News January 11, 2026
நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

பிஹார் CM நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக JD(U) MP கேசி தியாகி PM மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் இதை வலியுறுத்தியுள்ளார். இந்த பட்டியலில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப்பும் இணைந்துள்ளார். மேலும், நிதிஷ்குமாருக்கு கொடுத்தால் தனது தந்தைக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


