News November 25, 2024
மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
ஹாஸ்பிடல்களில் அடையாள அட்டை கட்டாயம்

தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் இன்று முதல் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயம் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலில் மகப்பேறு வார்டு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதன் எதிரொலியாக அரசு ஹாஸ்பிடலில் இனி ஐடி கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
சென்னையில் PM மோடி பங்கேற்கும் மாநாடு

ஜன.23-ல் தமிழகம் வரும் PM மோடி, மதுரையில் நடைபெறவுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மோடி பங்கேற்கும் மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்ளை தேர்வு செய்து, ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை பாஜகவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
News January 13, 2026
வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு ₹3,000

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ₹3,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் அனுமதியளித்த நிலையில், இன்று முதலே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். பொங்கல் முடிந்தபின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பண்டிகைக்கு முன்பே தரப்படவுள்ளது பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


