News November 25, 2024
மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
போன் இருந்தா போதும்.. ₹10 லட்சம் காப்பீடு பெறலாம்!

PM ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துக்கு ஆண்டுதோறும் ₹5 லட்சம் மருத்துவ காப்பீட்டு பெறலாம். <
News November 28, 2025
பிரபல நடிகை அம்மா ஆனார்.. FIRST PHOTO ❤️❤️

பாலிவுட் லவ் பேர்ட்ஸ் கியாரா அத்வானி & சித்தார்த் மல்கோத்ரா தங்கள் மகளின் போட்டோவை முதல்முறையாக வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோவில் இருவரும் தங்களின் உயிர்வரவான குழந்தையின் காலை தாங்கி பிடித்த உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜூலை 15-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மேலே உள்ள போட்டோவை Swipe செய்து ஜூனியர் கியாராவை பாருங்க. ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கியாரா நடித்திருந்தார்.
News November 28, 2025
‘டிட்வா’ எதிரொலி: காய்ச்சல் முகாம்களுக்கு உத்தரவு

டிட்வா புயல் எதிரொலியாக ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். மழைக்கு பின் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹாஸ்பிடல்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹாஸ்பிடல் அருகே மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


