News November 25, 2024
மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
பாக். தளபதிக்கு அதிக அதிகாரம்

பாகிஸ்தானை ஆள்வது PM ஷெபாஸ் ஷெரீப் அல்ல, ராணுவ தளபதி அசிம் முனீர் தான் என்று எதிர்கட்சித் தலைவர் இம்ரான்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி முனீருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய ஆளுங்கட்சித் தயாராகி வருகிறது. ஏற்கெனவே அரசியலில் ராணுவ தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்த திருத்தத்தால் ராணுவத்தின் கை மேலும் ஓங்கும்.
News November 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 7, 2025
ரூட்டை மாற்றும் ரிலையன்ஸ்

கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக விற்று வந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது கச்சா எண்ணையையே விற்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள தனது கச்சா எண்ணெய் சரக்கை கிரீஸ், இந்திய நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையில் இருந்து தப்பிக்க அல்லது புதிய பிசினஸ் உத்தியாக ரிலையன்ஸ் இந்த உத்தியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.


