News November 25, 2024
மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
இளையராஜாவுக்கு நன்றி என்று போடலாமே: கங்கை அமரன்

இளையராஜாவிடம் கேட்டாலே அவருடைய பாடல்களுக்கு காப்பிரைட் கொடுத்துவிடுவார் என கங்கை அமரன் கூறியுள்ளார். தான் இசையமைத்த பாடல்கள் வேறு படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இளையராஜா காப்பிரைட் வழக்கு தொடர்வது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்கை அமரன், படத்தில் இந்த பாடலை வழங்கிய இளையராஜாவுக்கு நன்றி என்று போட்டால் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 26, 2025
‘Word of the Year 2025’ இது தானா?

திடீரென உருவான ஒரு வார்த்தையை மக்கள் அதிகளவில் விரும்பி பேசினால், அதை Word of the year என்று ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி அறிவிக்கும். அதன்படி, 2025-ன் Word of the year பட்டியலில் Aura Farming, Biohack, Rage Bait இடம்பெற்றுள்ளன. இதன் முடிவுகள் டிச.1-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. மேற்கண்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா? இந்த வருடம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை எது?
News November 26, 2025
சார்லஸ் டார்வின் பொன்மொழிகள்

*ஒரு மணிநேரத்தை வீணடிக்க துணிந்த ஒருவன், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன்.
*ஒரு மனிதனின் நட்பு, அவனது மதிப்புக்குரிய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.
*ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தை போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு.


