News May 15, 2024
மீண்டும் சென்னையில் நாய்க்கடி சம்பவம்

சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உமாவின் புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் லாவன்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை நாய் கடித்த அதிர்ச்சி தீர்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு என்ன தீர்வு!
Similar News
News March 18, 2026
ஏன் அமித்ஷா அழைத்து பேசினார்? TTV

அதிமுக, அமமுகவை இணைக்க ஏன் பாஜக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதற்கு TTV தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அண்ணன் – தம்பி இடையே பிரச்னை ஏற்பட்டால் ஊரில் உள்ள பெரியவர்கள் தீர்த்து வைப்பது போல, தன்னையும் EPS-ஐயும் அமித்ஷா சேர்த்து வைத்தாக அவர் கூறியுள்ளார். மேலும், இருகட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News March 18, 2026
பெண்கள் வாக்கு திமுகவுக்கு இல்லை: தமிழிசை

தூத்துக்குடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்காதது பெரும் அவலம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். திமுகவின் ஆட்சியில் பெண்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காது எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கு CM ஸ்டாலின் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 18, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 18, பங்குனி 4 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


