News August 3, 2024
தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 5 ஆண்டு பணி நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2011-12 கல்வியாண்டில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த தற்காலிக பணிக்கான தொடர் நீட்டிப்பு காலம் 2022 டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
70 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‘ரத்தக்கண்ணீர்’

‘அடியே காந்தா’ என்ற வசனம் தற்போது நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த வசனம் இடம்பெற்ற படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்கவில்லை. M.R.ராதாவின் தனித்துவமான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. திருவாரூர் தங்கராசு எழுத்தில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவான ‘ரத்தக்கண்ணீர்’, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் கிளாசிக் படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் பிடித்த சீன் எது?
News January 3, 2026
FLASH: வெனிசுலா அதிபர் சிறை பிடிப்பு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் சிறை பிடித்து நாடு கடத்திவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, <<18750130>>வெனிசுலா மீது தாக்குதல்<<>> நடத்தப்பட்டதாகவும், சில மணி நேரங்களிலேயே மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலா தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 3, 2026
இந்த காய் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

காய்கறிகள் சாப்பிடுவதால் உங்கள் உயிரே போகலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், முட்டைகோஸ், கத்திரிக்காய், காலிஃபிளவர், கீரை போன்ற காய்கறிகளில் இருக்கும் நாடபுழுக்கள் தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனை சரியாக கழுவாமல் சாப்பிட்டால், புழுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்கு சென்றடையும். பிறகு, வலிப்பு, தலைவலியில் தொடங்கி உயிரையே பறிக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.


