News August 3, 2024

தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 5 ஆண்டு பணி நீட்டிப்பு

image

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2011-12 கல்வியாண்டில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த தற்காலிக பணிக்கான தொடர் நீட்டிப்பு காலம் 2022 டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 30, 2025

‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

image

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.

News October 30, 2025

கேரளாவில் தொடங்கிய SIR

image

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

image

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!