News March 2, 2025
அண்ணாமலையின் புதிய திட்டம்

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 1 கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று கூறிய அவர், வரும் 5ம் தேதி TNல் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக மக்களைக் குழப்ப வேண்டாம் எனவும், விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதிகள் உயரும் என்றும் கூறினார்.
Similar News
News March 12, 2026
இது இருந்திருந்தால் மாணவிக்கு வன்கொடுமை நடந்திருக்காதா?

வீட்டில் கழிப்பறை இல்லாததால் வெளியே சிறுநீர் கழிக்க சென்ற <<19356260>>மாணவி வன்கொடுமைக்கு<<>> ஆளாகியுள்ளார். தூய்மை இந்தியா இயக்கம் மூலம், கிராம & நகர்ப்புற வீடுகளில் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் 2014-லேயே வந்துவிட்டது. இந்நிலையில், 12 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கிராமங்களில் சில வீடுகளில் கழிப்பறை இல்லையா எனவும், அது இருந்திருந்தால் மாணவிக்கு இக்கொடுமை நடந்திருக்காது என்றும் பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 12, 2026
பாலியல் குற்றவாளிகளை திமுக காக்கிறதா? EPS

தூத்துக்குடியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS கூறியுள்ளார். சிறுமியை காணவில்லை என புகாரளித்தும் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கூறிய அவர், குற்றவாளிகளை உடனே கண்டறிந்தால் உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர் என்றார். மேலும், உறவினர்களுடன் திமுக MLA ஏன் சமாதானம் பேசவேண்டும் எனவும் குற்றவாளிகளை காக்க திமுக முயல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 12, 2026
BIG NEWS: இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்!

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனை NDTV செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவின் Pushpak மற்றும் Parimal கப்பல்கள் ஹார்முஸை பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்துக் கொண்டிருப்பதால், கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் பிரச்னை இருக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. SHARE IT.


