News December 29, 2024
அண்ணாமலை கோபம் சாதாரணம் கிடையாது: சீமான்

அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்த விவகாரம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் கோபத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறிய சீமான், அண்ணா பல்கலை. விவகாரத்தில் தனக்கும் பெருங்கோபம் இருப்பதாக தெரிவித்தார். அதற்காக தன்னை தானே சாட்டையால் அடிக்கக் கூடாது என்றும், குற்றவாளியை தான் சாட்டையால் அடிக்க வேண்டும் எனவும் கூறினார்.
Similar News
News March 10, 2026
விருதுநகர்: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்: விஜய்

விவகாரத்து வழக்கு, CBI விசாரணை என பல நெருக்கடிகள் இருந்தாலும் கட்சி பணியையும் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, பனையூர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களிடம் விஜய் இன்று நேர்காணல் நடத்தியுள்ளார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்றும் இனி அரசியலைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை எனவும் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 10, 2026
உங்களுக்கு Overthinking பிரச்னை இருக்கா?

Overthink செய்வதால், நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு மனரீதியிலான பிரச்னைகள் மட்டுமின்றி உடல் சோர்வு, தலைவலி, செரிமான பிரச்னை போன்றவை உண்டாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையிலிருந்து விடுபட தியானம் செய்யவும், மனதில் எதையும் அழுத்தி கொள்ளாமல் வெளிப்படையாக பேசவும் மனநல டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், Overthink பிரச்னை இருப்பவர்களுக்கு பாடல்கள் கேட்பதும் ஹெல்ப் பண்ணுமாம்.


