News June 26, 2024
ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில், தன்னை குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக 3 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத்திக்கு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், நஷ்ட ஈடாக பெறப்படும் ஒரு கோடியில், கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
ஆப்கானின் சோகத்தில் கைகொடுக்கும் இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் சமையல் பொருள்கள், மருந்துகள், தார்ப்பாய்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் உள்ளதாகவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணை நிற்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News April 7, 2026
திமுக கொடுத்தது சின்ன தோசை: பிரவீன் சக்கரவர்த்தி

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையிலும் மீண்டும் கூட்டணி குறித்து திமுக, தவெகவை ஒப்பிட்டு பிரவீன் சக்கரவர்த்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது. திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற முயன்றோம். ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றனர். மற்றொரு பக்கம் கல்யாண விருந்து வைத்து அழைப்பு விடுத்தனர். எனினும் பல்வேறு காரணங்களால் 28 இடங்களை காங்., தலைமை ஏற்றுக்கொண்டது என கூறியுள்ளார்.
News April 7, 2026
பாஜக – ஸ்டாலின் இடையே ஒரு மறைமுக டீலிங் உள்ளது: மம்தா

மேற்கு வங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளையே பாஜக நியமித்துள்ளதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். நாடியாவில் பிரசாரம் செய்த அவர், மேற்கு வங்கத்தை சேர்ந்த பல IAS, IPS அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது காங்கிரஸ் மற்றும் தமிழக CM ஸ்டாலினுடன் பாஜக ஒரு மறைமுக டீலிங் கொண்டுள்ளதை காட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


