News March 31, 2024
கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை

கச்சத்தீவு இலங்கைக்கு 1974இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில், 1974ஆம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு, கச்சத்தீவு மீதான உரிமையை
இலங்கைக்கு அளித்த தகவலை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 1961ல் கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளிக்க தயங்க மாட்டேன் என நேரு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
ELECTION: தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா SDPI?

மக்களுக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக SDPI தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாஸ் லீடராக வரும் விஜய், மக்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எங்கள் கட்சி மாநில குழு கூட்டம் நடைபெறும். அதில் தவெகவா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 15, 2026
சிறு வீட்டுப் பொங்கல்…!

சிறு வீட்டுப் பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வழக்கத்தில் உள்ள நடைமுறை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து, தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் அருகில் பொங்கல் வைத்து படையலிட்டு சாமி கும்பிட்டு மகிழ்வார்கள். தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உங்கள் பகுதியில் இம்மாதிரி செய்வதுண்டா?
News January 15, 2026
பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்து டிரம்ப் அதிரடி முடிவு!

உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கான விசா நடைமுறையை வரும் 21-ம் தேதி முதல் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களால் வெளிநாட்டினர் அளவுக்கு அதிகமாக பயன்பெறுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம், ரஷ்யா, ஈரான், குவைத் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக கருதப்பட்ட பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இப்பட்டியலில் உள்ளன.


