News April 15, 2024
I.N.D.I.A அணியை ஆட்டுடன் ஒப்பிட்ட அண்ணாமலை

I.N.D.I.A அணி தலைவர்கள் இல்லாத கூட்டணி என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல்லடத்தில் அவர் தனக்கு ஆதரவு திரட்டி பரப்புரையில் ஈடுபட்டார்.
10 செம்மறி ஆடுகள் ஒன்றாக இருந்தால் கூட தனக்கான தலைவனை தேர்ந்தெடுக்கும். ஆனால், I.N.D.I.A கூட்டணியால் அதுகூட முடியவில்லை என்று விமர்சித்த அவர், திமுக போல் தொகுதிக்கு ஒளித்து வர மாட்டேன், வாக்குறுதிகளை நிறைவேற்றி கெத்தாக வருவேன் என்றும் தெரிவித்தார்.
Similar News
News October 28, 2025
Rohit அதிரடியாக விளையாட விரும்பவில்லை: முகமது கைஃப்

ஆஸி.,க்கு எதிரான முதல் ODI போட்டியில் சொதப்பிய ரோஹித், 2-வது (73 ரன்கள்), கடைசி (121 ரன்கள்) போட்டிகளில் ரன்களை குவித்தார். தனது ரன்களை வைத்தே ரசிகர்கள் தன்னை மதிப்பிடுவார்கள் என்பதை ரோஹித் புரிந்து வைத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 20 பந்துகளில் 40 ரன்கள் என்ற அதிரடி விளையாட்டை ரோஹித் விளையாட விரும்பவில்லை என்ற அவர், களத்தில் நீண்ட நேரம் இருக்க விரும்புவதாகவும் கூறினார்.
News October 28, 2025
கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. ₹100 கொடுத்தால் போதும் போராட்டத்துக்கு வந்துவிடுவார்கள் என மூதாட்டி ஒருவரை கேலி செய்யும் வகையில், பகிரப்பட்ட Meme-ஐ கங்கனா ரனாவத் Retweet செய்திருந்தார். இதற்கு எதிராக மூதாட்டியின் கணவர் பஞ்சாப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜரான கங்கனா தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார்.
News October 28, 2025
புதுச்சேரி ஆளும் கூட்டணியில் இருந்து விலகினார்

சுயேச்சை MLA நேரு, ‘நமது மக்கள் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 2021 தேர்தலில் உருளையன்பேட்டையில் வென்ற அவர், ஆளும் NR காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதனிடையே, CM ரங்கசாமி, பாஜகவுடன் சேர்ந்து தனது தனித்தன்மையை இழந்ததால் புதிய கட்சி தொடங்க வேண்டிய நிலை உருவானதாக நேரு கூறினார். கட்சி தொடக்க விழாவில் பெரியார் படம் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியது.


