News August 14, 2024

கலைஞர் நாணய விழாவில் அண்ணாமலை…

image

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி CM ஸ்டாலின் தொலைபேசி மூலம் தனக்கு அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளார். கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும், அரசியல் நாகரீகத்திற்காக பங்கேற்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரம், ஆளுநர் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது பிடிக்கவில்லை என்றார்.

Similar News

News December 10, 2025

திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் SC வரை சென்றுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 10, 2025

சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

image

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.

News December 10, 2025

வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

image

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

error: Content is protected !!