News December 30, 2024
அண்ணா பல்கலை. வழக்கை CBIயிடம் கொடுங்க: எல்.முருகன்

அண்ணா பல்கலை. மாணவி வழக்கை தமிழக அரசால் விசாரிக்க முடியவில்லை என்றால் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர், மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Similar News
News July 11, 2025
மினிமம் பேலன்ஸ் இல்லையா.. BOB வங்கியில் சலுகை

சாதாரண சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்கவில்லையேல் பேங்க் ஆப் பரோடா (BOB ) அபராதம் விதித்து வந்தது. இந்நிலையில், அந்த வங்கி தற்போது மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இனி கவலை கொள்ள வேண்டாம், அபராதம் விதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் இது ப்ரீமியம் சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் BOB கூறியுள்ளது.
News July 10, 2025
கோவை குண்டுவெடிப்பு: பறிபோன 58 உயிர்கள் REWIND

1998. பிப்.14. கோவை தொடர் குண்டுவெடிப்பால் தமிழகமே அதிர்ந்து போன தினம். இந்த சம்பவத்தில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 58 பேர் உயிரிழந்தனர். தேர்தல் பிரசாரத்துக்கு அத்வானி கோவைக்கு வரப் போகும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர குற்றத்தில் முக்கிய குற்றவாளியான சாதிக் (எ) டெய்லர் ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பறிபோன 58 உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?
News July 10, 2025
பட்டாவில் அதிரடி மாற்றம்… விரைவில் புதிய நடைமுறை

இ- பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். SHARE IT.