News January 9, 2025

பொங்கலுக்கு ரூ.1000 தராத கோபம்: வெடிகுண்டு மிரட்டல்

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விரைவில் ஆட்சியர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு ஃபோனை கட் செய்தார். இதையடுத்து, செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாத கோபத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார்.

Similar News

News January 15, 2026

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை!

image

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று CM ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்தவர், அங்கு வசித்துவரும் துரை-சுமதி என்ற தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ‘வெற்றி’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

News January 15, 2026

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்

image

தீவிரவாத மனப்பான்மை நீடிக்கும் வரை அமைதிக்கான நமது ஆபரேஷன் தொடரும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த தேசிய ராணுவ தின நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தனது தேசிய குணத்தை வெளிப்படுத்தியது என்றும், வரலாற்றில் தைரியத்தின் அடையாளமாக ஆபரேஷன் சிந்தூர் நினைவுகூரப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.

News January 15, 2026

பொங்கல் முடிந்து ஊருக்கு திரும்புவோருக்கு அதிர்ச்சி!

image

குறைவான முன்பதிவு காரணமாக 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தாம்பரம்- கன்னியாகுமரி, 19-ம் தேதி இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல்- கோவை, 21-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தாம்பரம் – நாகர்கோவில், 21-ம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு கோவை போத்தனூர் – சென்ட்ரல், 21-ம் தேதி பகல் 1.50 மணிக்கு சென்ட்ரல் – போத்தனூர் ஆகிய ரயில்கள் ரத்தாகியுள்ளன.

error: Content is protected !!