News April 24, 2025

காஷ்மீர் மக்களை நினைத்து ஆண்ட்ரியா வேதனை

image

பஹல்காம் தாக்குதல் இதயத்தை உலுக்குவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இதன் பிறகு அதீத கண்காணிப்பிற்கு உள்ளாகப்போகும் காஷ்மீர் மக்களை நினைத்து இதயம் கணப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இச்சூழலில், இச்சம்பவத்தால் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் / சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 24, 2025

மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

image

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

News April 24, 2025

பிரேக் எடுக்கும் விஜய்?.. ‘ஜனநாயகன்’ பட அப்டேட்!

image

கடைசி படமாக ‘ஜன நாயகன்’-ல் நடித்து வரும் விஜய், ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் ப்ரேக் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஷூட்டிங் நிதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பணி காரணமாக ஷூட்டிங்கிற்கு முழுக்கு போட விஜய் திட்டமிட்டுள்ளாராம். எனினும், மே மாத இறுதிக்குள் விஜய்யின் போர்ஷன் நிறைவடையும் என கூறப்படுகிறது.

News April 24, 2025

1,500 பேர் கைது.. அதிரடியில் இறங்கிய காஷ்மீர் போலீஸ்!

image

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் டேட்டாக்களில் இருப்பவர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் என பலரையும் கைது போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும், ஜம்மு – காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!