News October 12, 2025
இந்திய வீராங்கனைகளுக்கு பெருமை சேர்ந்த ஆந்திரா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னாள் கேப்டன் மித்தாலியை ஆந்திர மாநில அரசு கௌரவித்துள்ளது. இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டியின் போது அவரது பெயரில் கேலரி ஒன்று திறக்கப்பட்டது.
அதேபோல் விக்கெட் கீப்பர் ரவி கல்பனா பெயரும் ஒரு கேலரிக்கு சூட்டப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2026
2 நாள்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வரும்: பியூஷ் கோயல்

தமிழகத்தில் மாநில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் 2 நாள்களில் பட்டியல் வெளியாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
News March 31, 2026
BREAKING: விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

சீட் மறுப்பால் பல நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில், திமுக Ex MP சண்முகத்தின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில ஆதிக்க சக்திகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக, அவர் தலைமைக்கு எழுதிய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நிர்வாகிகள் விலகுவது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News March 31, 2026
சிலிண்டர் புக்கிங்கால் சிக்கிய தலைமறைவு குற்றவாளி

ம.பி.,யில் மனைவியை கொன்ற வழக்கில், 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த Ex ராணுவ கேப்டனை கேஸ் புக்கிங்கை வைத்து போலீஸ் கைது செய்துள்ளனர். 2013-ல் மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு, 2022-ல் ஐகோர்ட் தண்டனையை உறுதிசெய்தது. அதன்பிறகு சரணடையாமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில்தான் கேஸ் புக்கிங் செய்த சந்தீப்பின் Bank Account-ஐ போலீஸ் டிராக் செய்து கையும் களவுமாக பிடித்துள்ளனர்.


