News August 22, 2024

ஆந்திரா விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

image

ஆந்திராவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். அச்சுதாபுரத்தில் உள்ள Escientia ஃபார்மா ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து நிகழ்ந்தது.

Similar News

News December 7, 2025

திமுக சமாதானத்தை போற்றுகிறது: சேகர்பாபு

image

சனாதனத்தை தாங்கள் (திமுக) அழிக்க முயலவில்லை என்று சேகர்பாபு கூறியுள்ளார். வட மாநிலங்களில் வேண்டுமானால் பாஜக நினைத்த மாதிரியான காரியங்கள் நடக்கலாம், ஆனால் தமிழகத்தில் அது பகல் கனவாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார். சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் அதை எதிர்ப்பதாக தெரிவித்த சேகர்பாபு, திமுக அரசு சமாதானத்தை போற்றுகின்ற அரசு என்றும் தெரிவித்தார்.

News December 7, 2025

CINEMA 360°: புது லுக்கில் கலக்கும் ஜி.வி.பிரகாஷ்

image

*புதுமுகங்கள் நடித்துள்ள ‘மாயபிம்பம்’ படத்தின் எனக்குள்ளே என்ற பாடலை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். *சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. *ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். *ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘தி பாய்ஸ்’ வெப் சீரிஸின் 5-வது பாகத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

News December 7, 2025

34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்கே: H ராஜா

image

திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கிடையே, H ராஜா முதன்மை ரோலில் நடித்துள்ள ‘<<18493915>>கந்தன் மலை<<>>’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இதுதொடர்பாக பேசிய H ராஜா, 1310-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆட்சி செய்த சுல்தான்கள், பல இந்து கோயில்களை இடித்தனர் என்றார். இதுதொடர்பாக 1930-ல் வழங்கிய லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில், 34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருப்பதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!