News December 2, 2024
மேலும் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கையாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
IPL: RCB அணிக்கு 163 ரன்கள் இலக்கு

புது டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், RCB அணிக்கு DC அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற RCB கேப்டன் பட்டிதார் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய DC அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் DC அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
News April 27, 2025
தங்க விற்பனையில் மாறும் டிரெண்ட்!

தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக நகை வாங்கும் பழக்கம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர், தங்கத்தை முதலீடு நோக்கத்திலேயே அணுகுவதால் காயின், தங்கக் கட்டி வாங்குவதாக கூறியுள்ளனர். அதனை பணத் தேவையின் போது சிறிதளவும் மதிப்பு குறையாமல் விற்பனை செய்யலாம். ஆனாலும், இப்படி செய்வதால் நகை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
News April 27, 2025
25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்.. கணவரின் திட்டம்!

வரதட்சணையாக ₹50 லட்சமும், 100 பவுன் நகையும் பெற்றுக்கொண்டு கேரளாவின் ஷாகா குமாரியை (52) அருண் (27) 2020-ல் திருமணம் செய்கிறார். கல்யாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் ஷாகா, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அருணை வற்புறுத்துகிறார். ஆனால், ந்த இரண்டுலுமே அருணுக்கு விருப்பமில்லை. இதனால், ஷாகாவை கரண்ட் ஷாக் வைத்து கொலை செய்த நிலையில், அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.