News September 25, 2025
ஜி.கே.மணி பதவியை பறிக்க அன்புமணி தரப்பு மனு

ஆக்.14-ல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், பாமகவில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ராமதாஸ் ஆதரவாளரான ஜி.கே.மணியின் PMK சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை பறிக்கக்கோரி அன்புமணி ஆதரவு MLA-க்கள் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். ஜி.கே.மணிக்கு பதில் புதிய சட்டமன்றக் குழுத் தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வானதால், அவர் பாமக சார்பில் முன்வரிசையில் அமருவாரா என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News September 25, 2025
சென்னை வந்தடைந்தார் ரேவந்த் ரெட்டி

தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் துவங்குகிறது. இந்நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி சென்னை ஏர்போர்ட் வந்தடைந்தார். அப்போது அவரை அமைச்சர் TRB ராஜா வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கின்றனர்.
News September 25, 2025
கொடூரம்.. அண்ணியின் கற்பை சோதித்த நாத்தனார்

நாளுக்கு நாள் அறிவியலில் முன்னேறினாலும் சில மூடப் பழக்கங்கள் இன்னும் ஒழிந்தபாடில்லை. அப்படி ஒரு கொடூர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. விஜப்பூரில் அண்ணன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த நாத்தனார், அவரது கற்பை பரிசோதிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட கூறியுள்ளார். அதனை செய்ய மறுத்ததால் பெண்ணை கட்டாயப்படுத்தி எண்ணெய்யில் அழுத்திய ஜமுனா தாகூர், கணவர் மனுபாய் தாகூர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
News September 25, 2025
இனி இப்படி செய்தால் PF பணம் கிடையாது

EPF 1952 விதியின் கீழ், திருமணம், படிப்பு, உடல்நல பிரச்னைகள் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவே PF தொகையை எடுக்க வேண்டும் என EPFO அறிவுறுத்தியுள்ளது. இதை தவிர வேறு ஏதும் காரணங்களுக்காக PF பணத்தை எடுத்தால் 3 ஆண்டுகளுக்கு பணம் எடுக்க முடியாது என EPFO எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்லது அந்த தொகையை அபராதத்துடன் செலுத்தும் வரை மீண்டும் பணம் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.