News October 25, 2025
திருமா, வைகோவுக்கு அன்புமணி முக்கிய கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என தெரிந்தும் திருமாவளவன், வைகோ ஆகியோர் ஏன் இன்னும் கேட்கவில்லை என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது கூட்டணிக்காகவா, ஓட்டுக்காகவா (அ) தேர்தலுக்காகவா என்றும் அவர் கேட்டுள்ளார். சாதியால் வந்த வேற்றுமைகளை சினிமா பார்த்து போக்கிவிட முடியுமா என்று ’பைசன்’ படத்தை திருமா பாராட்டியதையும் மறைமுகமாக குறிப்பிட்டார்.
Similar News
News January 15, 2026
தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு!

2026 தேர்தலையொட்டி தமிழகத்தில், EVM இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகளும், பெல் நிறுவன பொறியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். மொத்தம் 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.16 லட்சம் VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
News January 15, 2026
ஸ்மார்ட்போன் விலை அதிகரிக்கும்: Nothing CEO

இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விலைகள் 30% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று Nothing நிறுவனத்தின் CEO கார்ல் பேய் கணித்துள்ளார். memory, storage உள்ளிட்டவைகளின் தேவையை AI அதிகரித்துள்ளது. இதனால், memory, storage சிப்களின் விலை அதிகரிப்பால் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு செலவுகளும் அதிகமாகும். எனவே, போனின் அம்சங்களை குறைக்க வேண்டும் அல்லது விலையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
ஆழ்ந்த உறக்கத்தின் 6 நன்மைகள்

ஆழ்ந்து உறங்குவதால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தூக்கத்தில் உடல் மட்டுமல்ல மனமும் இளைப்பாறுகிறது. இதனால் *கவனக் குவிப்பு திறம் மேம்படுகிறது *நினைவாற்றல் சிறப்பாக செயல்படுகிறது *படைப்பாற்றல் திறன் வளர்கிறது *சிறப்பாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது *எதிர்மறை விஷயங்கள் குறைகிறது *நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.


