News August 18, 2025
விரக்தியின் உச்சத்தில் அன்புமணி: அமைச்சர்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணி தோற்றதால் இந்த மாவட்டத்தை ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என அன்புமணி தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய அமைச்சர் MRK பன்னீர் செல்வம், தருமபுரியை புறக்கணித்திருந்தால் 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு எப்படி 100 சதவீதம் வெற்றிக் கிடைத்திருக்கும் என கேட்டார். மேலும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் எனவும் விமர்சித்தார்.
Similar News
News August 18, 2025
நாடகம் நடத்தும் காங்கிரஸ்: ஜி.கே.வாசன் தாக்கு

வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்., கடந்த ஒருவாரமாக EC-க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜி.கே.வாசன், EC-ஐ காங்., கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்; பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சித்துள்ளார். மேலும், காங்., கூட்டணி பலவீனமாக உள்ளதால், அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகம் நடத்தப்படுவதாகவும் சாடினார்.
News August 18, 2025
கை மார்புக்கு வலு சேர்க்கும் சதுரங்க தண்டாசனம்!

✦கைகள், தோள்கள், மார்பு, மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
➥தரையில் குப்புற படுத்து கொள்ளவும். பிறகு இடுப்பை மேலே உயர்த்தி, கைகளில் அழுத்தம் கொடுத்து, கால் & மார்பை தரையில் படும்படி கீழிறக்கவும்.
➥பிறகு, கால் தரையில் இருக்க, மேல் உடம்பை மட்டும் மேலே உயர்த்தவும். இந்த நிலையில் 15- 20 விநாடிகள் இருந்து விட்டு, பிறகு கால்களையும் உடலுக்கு நேராக இருக்கும் படி உயர்த்தவும்.
News August 18, 2025
திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது: அன்புமணி

வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என்பது தான் தனது ஆசை என அன்புமணி தெரிவித்துள்ளார். பர்கூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 350 சாதிகள் உள்ளன. அதில் எந்தெந்த சாதிகள் இன்னும் முன்னேறவில்லை, யார் எல்லாம் பின்தங்கிய நிலையில் உள்ளனர், கல்வியறிவு முழுமையாக பெற்றிருக்கிறார்களா என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமென்றார்.