News April 23, 2025
தங்கர் பச்சானின் குடும்பத்தில் ஒரு IAS

இயக்குநர் தங்கர் பச்சானின் அண்ணன் செல்வராசுவின் பேத்தியான சரண்யா சரவணன், UPSC தேர்வில் 125-வது இடம்பிடித்து IAS-ஆக தேர்வாகியுள்ளார். கடலூர் பத்திரக்கோட்டையைச் சேர்ந்த சரண்யா, 4-வது முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு தங்கர் பச்சான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு IAS-ஆக 2 பேருடைய கண்ணீரையாவது துடைப்பேன் என நம்புவதாகவும் சரண்யா கூறியுள்ளார்.
Similar News
News September 11, 2025
நாசாவில் சீனர்களுக்கு தடை: உஷாரான அமெரிக்கா

நாசாவில் பணியாற்ற சீனாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. நாசாவில் ஊழியர்களாக சீனர்கள் பணியாற்றவில்லை என்றாலும், ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், ஆய்வாளர்களாகவும் செயலாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நாசாவின் தரவுகளை பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு செல்லும் பயணத்தில் தற்போது சீனாவும், US-வும் கடும் போட்டிபோட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News September 11, 2025
டென்னிஸ் லெஜண்டை நாட்டில் இருந்து வெளியேற்ற அழுத்தம்

24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் லெஜண்ட் ஜோகோவிச், செர்பியாவில் இருந்து வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஜோகோவிச் ஆதரித்ததால், நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால், கிரீஸ் நாட்டிற்கு அவர் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
News September 11, 2025
நடிகை ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி

<<15081057>>குடும்ப வன்முறை வழக்கில்<<>>, பிரபல நடிகை ஹன்சிகாவின் மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஹன்சிகாவின் சகோதரரின் மனைவியான முஸ்கான், தன் கணவன், மாமியாருடன் நாத்தனார் ஹன்சிகாவும் சேர்ந்து மனரீதியாக கொடுமைப் படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யும்படி ஹன்சிகா அளித்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ஹன்சிகா மற்றும் தாயார் ஜோதி இருவருக்கும் முன்ஜாமின் மட்டும் வழங்கியது.