News April 25, 2025
பஹல்காமில் ஒரு அயோத்தி சசிகுமார்

தனது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது, தன்னையும் தனது குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் இருவர் காப்பாற்றினர் என கேரளாவைச் சேர்ந்த ஆரத்தி சரத் கூறியுள்ளார். அயோத்தி படத்தில், இந்து மத குடும்பத்திற்கு இஸ்லாமியரான சசிகுமார் உதவுவது போன்று பஹல்காமிலும் நிகழ்ந்துள்ளது. மேலும், தந்தையின் சடலம் கிடைக்கும் வரையிலும் அவர்கள் ஆரத்தி உடனே இருந்துள்ளனர்.
Similar News
News November 24, 2025
போனை திருடியவரை இப்படி ஈஸியா கண்டுபிடிக்கலாம்

உங்கள் போன் திருடுபோனால் எளிதில் கண்டுபிடிக்க சில ஆப்கள் உள்ளன. Bitdefender, Cerberus, Prey ஆகிய செயலிகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யுங்கள். அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, பர்மிஷன்களை கொடுத்துவையுங்கள். உங்கள் போனை திருடியவர் SIM-ஐ மாற்றினாலோ, SWITCH OFF செய்ய முயற்சித்தாலோ (அ) தப்பான Password-ஐ உள்ளிட்டாலோ இச்செயலிகள் உடனடியாக Selfie எடுப்பதோடு, லொகேஷனையும் உங்களுக்கு SHARE செய்யும்.
News November 24, 2025
மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறையா? வந்தது அப்டேட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால் விடுமுறை அளிக்காத மாவட்டங்களுக்கு மதியத்திற்குமேல் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
சற்றுமுன்: புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பரப்புரையின்போது விஜய் தாமதமாக வந்தாரா, பரப்புரை நடைபெற்ற இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டதா, சம்பவம் நடந்தபோது அங்கிருந்தது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.


