News June 19, 2024
இன்று இரவே பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை, இன்று இரவே பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிந்தராஜ் என்பவர் விற்ற பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்ததில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட 70க்கும் அதிகமானோர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 15, 2025
OFFICIAL: CSK அணியில் இருந்து கான்வே விடுவிப்பு

CSK அணியில் இருந்து நியூஸி., பேட்ஸ்மென் டெவான் கான்வே விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, 3 ஆண்டுகளாக தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2023 ஐபிஎல் ஃபைனலில் CSK அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கான்வே. 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களை அடித்து அப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
News November 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 15, ஐப்பசி 29 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶சிறப்பு: ஏகாதசி விரதம், கருட தரிசனம் நன்றி. ▶வழிபாடு: பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.
News November 15, 2025
35 ஆண்டுகளாக MLA-கள்.. மீண்டும் வெற்றி

பிஹார் NDA கூட்டணி மூத்த வேட்பாளர்களான பிரேம் குமார் (BJP), பிஜேந்திர பிரசாத் யாதவ் (JDU) ஆகியோர், 9-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 1990 முதல் MLA-க்களாக உள்ளனர். கயா தொகுதியில் பிரேம் குமார் 26,423 வாக்குகள் வித்தியாசத்திலும், பிஜேந்திர சிங் 30,803 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளனர். இருவரும் இதே தொகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளாக MLA-க்களாக உள்ளனர்.


