News May 24, 2024
கூடுதலாக 918 மருத்துவ மாணவர்கள் உருவாவார்கள்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 153 பேர் வீதம், 11,000க்கும் அதிக மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. தற்போது 6 மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 918 மருத்துவ இடங்கள் உருவாகின்றன. இதனால், இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டில் உருவாவார்கள்.
Similar News
News August 17, 2025
திருமா மரியாதையை காப்பாத்தனும்: EPS அறிவுரை

திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். செங்கம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், மக்கள் மத்தியில் திருமாவளவனுக்கு ஒரு மரியாதை உள்ளது என்றும், அதனை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றார். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை எல்லாம் திருமாவளவன் பேசுவதாகவும் தெரிவித்தார்.
News August 17, 2025
நடிகை மினு முனிர் வழக்கில் திடுக்கிடும் தகவல்

நடிகை மினு முனீர் அண்மையில் போக்சோ சட்டத்தில் கைதானார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கும் சூழலில், ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிவுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்ததால் சென்னையில் தங்கிய வீடு, குற்றவாளிகள் அடையாளம், ஓட்டல் குறித்த விவரங்களை மறந்துள்ளதாகவும், இதனால் வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போலீசார் திணறுவதாகவும் கூறப்படுகிறது.
News August 17, 2025
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.