News April 30, 2024
கோவை தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு

கோவை சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல மாதமாக மூடியிருந்த அந்த ஆலையில், பராமரிப்புப் பணி மேற்கொண்டு வந்தபோது, சிலிண்டர் வெடித்து அமோனியா கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாயு கசிவால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Similar News
News September 20, 2025
நயினார் மீது பாஜகவினர் அதிருப்தி?

பாஜகவில் மகன் பாலாஜிக்கு விளையாட்டு & திறன் மேம்பாட்டு அமைப்பாளர் பதவி வழங்கினார் நயினார். இதனால் வாரிசு அரசியலை எதிர்க்கும் பாஜகவினர் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், அடுத்த தலைவர் நான் தான் என்பதுபோல கறார் காட்டி வருகிறாராம் பாலாஜி. இதனால் கடுப்பான பாஜகவினர் நயினாரிடம் புகாரளிக்க, அவர் புகாரளிப்பவர்களையே கண்டிப்பதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமைக்கு இதுபற்றி ரிப்போர்ட் பறக்குமா?
News September 20, 2025
சைலெண்டான சந்தானம்!

‘Devil’s Double’ படம் சரியாக போகாததை தொடர்ந்து தற்போது சந்தானம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலே இல்லை. வரிசையாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெறாத நிலையில், அடுத்த படம் குறித்த தேர்வில், அவர் மிகவும் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சந்தானம் சிம்புவுடன் நடிக்கிறார் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த படமும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை. Comeback கொடுங்க சந்தானம்!
News September 20, 2025
சரும ஆரோக்கியத்துக்கு இந்த மூலிகை தேநீர் குடிங்க!

கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மணத்தக்காளி கீரை டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *புதிய மணத்தக்காளி கீரையின் இலைகளை வெயிலில் நன்றாகக் காய வைக்கவும் *பிறகு, இந்த இலைகளை தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும் *அதனை, வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம் ➦எந்த ஒரு மூலிகை தேநீரை பருகுவதற்கு முன்னும், டாக்டரிடம் ஆலோசிக்கவும். SHARE IT.