News April 16, 2025
வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
தலைமை சொன்னால் CM ஆக தொடர்வேன்: சித்தராமையா

கர்நாடகாவில் <<18373166>>உள்கட்சி பூசல்<<>> உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். டிகே சிவகுமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தால், தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகு, இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
News November 25, 2025
ராசி பலன்கள் (25.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 25, 2025
புஸ்ஸி ஆனந்த், ஆதவிடம் CBI தீவிர விசாரணை

41 பேர் உயிரிழந்த கரூர் துயரம் தொடர்பாக தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளது. சுமார் 10 மணி நேரம் நடந்த விசாரணையில் தவெக தலைவர்கள் அளித்த விளக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


