News April 16, 2025

வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

image

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2025

BREAKING: பதவியை பறித்தார் ஸ்டாலின்

image

கோவை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை பறித்து, ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து கொண்டே, அதிமுகவினருடன் மகாலிங்கம் தொடர்பில் இருந்துள்ளார். இன்று நடந்த ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின்போது, இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், உடனே அவரின் கட்சிப் பதவியை, ஸ்டாலின் பறித்துள்ளார். மேலும், பதவி பறிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் திமுகவினரை எச்சரித்துள்ளார்.

News November 19, 2025

‘வாரணாசி’ டைட்டில் சர்ச்சை வெடித்தது

image

‘வாரணாசி’ டைட்டில் உரிமம் ராம பிரம்மா ஹனுமா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. ‘Vaaranasi’ என அந்த தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்துள்ள நிலையில், ராஜமௌலி ‘Varanasi’ என தனது படத்திற்கு பெயரிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதான நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ராஜமௌலியும், படத்தின் தயாரிப்பாளரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

News November 19, 2025

மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

image

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!