News March 5, 2025
தமிழகம் வரும் அமித்ஷா.. காவல்துறை முக்கிய உத்தரவு

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது. அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் பயிற்சி மையத்திற்கு நாளை வரவுள்ளதால், இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு இந்த தடை இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 18, 2025
FLASH: கிருஷ்ணகிரி: நாட்டு வெடிகுண்டு வீசிய மூவர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேகுறியில் TATA நிறுவனத்தின் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் TATA நிறுவன பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலியான நிலையில் நண்பர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சக்திவேல் (28), தனுஷ் (25), சேகர் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 18, 2025
விஜய் பரப்புரை.. முதல் அதிர்ச்சி சம்பவம்

விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற இளைஞருக்கு திடீரென்று உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்ததால், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தவெகவினர், அவரை மீட்டு போலீஸ் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர்.
News December 18, 2025
இந்திய-வங்கதேச உறவு பாதிக்கப்படாது: ஷேக் ஹசீனா

வங்கதேச<<18539019>>பொதுத்தேர்தலில்<<>>, அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்திருப்பது, ஜனாநாயகத்தை கேலியாக்குவது போன்றது என அக்கட்சி தலைவர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நேர்மையானதாக இருக்காது என குற்றஞ்சாட்டிய அவர், தடை செய்தாலும் கட்சியை அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். வரலாறு, கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட <<18591819>>இந்திய-வங்கதேச உறவு<<>> சிலரின் இடைபட்ட செயல்பாட்டால் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


