News April 27, 2025
சூழும் போர் மேகம்..அமித்ஷா-BSF இயக்குநர் சந்திப்பு

இந்தியா-பாக். எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், எல்லை பாதுகாப்பு படையின்(BSF) இயக்குநர் தல்ஜித் சிங் சௌதரி, உள்துறை அமைச்சகத்துக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக, பாக். எல்லையில் உள்ள விவசாயிகள் பயிர்களை 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டுமென BSF காலக்கெடு விதித்திருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சகத்துக்கு BSF இயக்குநரின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Similar News
News December 6, 2025
45 வயது முதல் இனி பெண்களுக்கு Lower berth!

மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ரயிலில் Lower Berth இருந்தால், அது தானாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், முன்பதிவில் கேட்காவிட்டாலும், Quota அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.
News December 6, 2025
அமெரிக்காவில் தடுப்பூசியில் புதிய சர்ச்சை!

கல்லீரலை தாக்கும் Hepatitis B வைரஸுக்கான தடுப்பூசி, WHO பரிந்துரைப்படி இந்தியா உள்பட பல நாடுகளிலும், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் போடப்படுகிறது. ஆனால், USA-வில் தாய்க்கு தொற்று இருந்தால் மட்டுமே தடுப்பூசி அவசியம். இல்லையெனில் பின்னர் போட்டுக்கொள்ளலாம் என விதி மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் நோய் பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
News December 6, 2025
தேர்தல் கூட்டணி.. அறிவித்தார் செங்கோட்டையன்

பாஜக தன்னை தவெகவுக்கு அனுப்பியதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவருடைய கொள்கைதான் அனைத்துத் தொண்டனுக்கும். அது தனக்கும் பொருந்தும் எனக் கூறிய அவர், அதிமுக – தவெக கூட்டணிக்கு 100% வாய்ப்பே இல்லை என உறுதிபட அறிவித்தார். மேலும், மாபெரும் மக்கள் சக்தியுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.


