News April 29, 2025
இலவச பட்டா விதிகளில் திருத்தம்!

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான ஆண்டு வருமான வரம்பு ₹3 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 சென்ட் நிலம் வழங்கப்படும். இதில் 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் இல்லை. மீதமுள்ள 1 சென்ட் நிலத்திற்கு அதன் மதிப்பில் 25% தொகையைச் செலுத்த வேண்டும்.
Similar News
News August 21, 2025
SPACE: ஜூபிடரில் உள்ள RED DOT மர்மம்..என்ன தெரியுமா?

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளின் மேற்பரப்பில் ஒரு தனித்துவமான சிவப்பு புள்ளியை நாம் கண்டிருப்போம். இதை என்னவென்று நீங்கள் யோசித்தது உண்டா? வியாழனில் அமைந்துள்ள இந்த சிவப்பு புள்ளி ஒரு சாதாரண புள்ளி அல்ல. இது 350 நூற்றாண்டுகளுக்கு மேலாக சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சுழல் என்கின்றனர் விஞ்ஞானிகள். இச்சுழல் சுமார் 16,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் கொண்டது. SHARE.
News August 21, 2025
கவர்னருக்கு காலக்கெடு கூடாது… மத்திய அரசு வாதம்

ஜனாதிபதி, கவர்னருக்கு <<17154106>>காலக்கெடு<<>> விதிப்பது தொடர்பான வழக்கு இன்று SC-யில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாதிக்கப்பட்ட மாநிலம் கோர்ட்டை அணுகினால், கோர்ட் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?’ என CJI கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல், ‘அனைத்து பிரச்னைக்கும் நீதிமன்றமே தீர்வு அல்ல. அரசியல் சாசன அதிகாரிக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை’ என்று பதிலளித்தார்.
News August 21, 2025
ED ரெய்டால் DMK – BJP கூட்டணி அமையலாம்: அருண்ராஜ்

திமுகவை உருவாக்கிய அண்ணா, கடனில் வாழ்ந்து தனது கடைசி மூச்சை விட்டார் என கூறிய அருண்ராஜ், திமுகவின் தற்போதைய தலைவர்கள் ஊழலில் வாழ்வதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாநாட்டில் பேசிய அவர், பிளவுவாத அரசியலை செய்யும் திமுக அரசு மக்களை ஏமாற்றி நாடகம் நடத்துகிறது என்றார். மேலும், TN-ல் அடுத்து ED ரெய்டு நடந்தால் பயந்துபோய் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அமைக்கும் என்றார். உங்கள் கருத்து?