News April 4, 2025
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம்: மோடி

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
இதுதான் தீபத்தூண்: போட்டோ சமர்பித்த அறநிலையத்துறை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மலைகளில் உள்ள தூண்களின் புகைப்படங்களை அறநிலையத்துறை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. மேலும், மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளதுதான் தீபத்தூண் என மக்கள் நம்புகிறார்கள்; அதில், நாயக்கர்களின் பெயர்களும், ஹனுமான் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள தூணில் கடவுளின் உருவங்கள் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
News December 15, 2025
மெஸ்ஸிக்கு ₹200 கோடி; இந்திய கால்பந்துக்கு எவ்வளவு?

மெஸ்ஸியின் இந்திய பயணத்துக்கு ₹200 கோடி செலவானதாம். இவரின் 3 நாள் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவு செய்யும் நிறுவனங்களும், அரசும், இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்த இவ்வளவு செலவிட்டிருந்தால், இங்கேயும் மெஸ்ஸிகள் உருவாகி இருப்பார்கள். உலக தரவரிசையில் 142-வது இடத்தில் இருக்க மாட்டோம். கால்பந்து வளராததற்கு கிரிக்கெட்டை மட்டுமே குறை கூறாமல், வேறு வழியில் சிந்திக்க வேண்டியது இன்றைய தேவை. உங்க கருத்து?
News December 15, 2025
ALERT: இந்த வயதினருக்கு திடீர் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

இந்தியாவில் 45 வயதுக்கு குறைந்தவர்களின் திடீர் மரணங்களில், மாரடைப்புதான் முதன்மையான காரணம் என Indian Journal of Medical Research தெரிவித்துள்ளது. இதில் பலர் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால், அதீத மன அழுத்தம், குறைவான தூக்கம், புகை–மது பழக்கம், அதிக சர்க்கரை, போதிய உடலுழைப்பு இல்லாமை, High BP, கண்டறியப்படாத இதய கோளாறுகள் ஆகியவையே திடீர் மாரடைப்புகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளது. உஷார்..!


