News April 4, 2025
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம்: மோடி

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
இந்த தீபாவளியில் இவர்களை கொஞ்சம் கவனியுங்க!

நம்மில் பலருக்கும் தீபாவளி ஒரு கொண்டாட்டம். ஆனால், இவர்களை போன்றவர்களுக்கு அதுவும் ஒரு போராட்டம். நம்மை நம்பி, ரோட்டில் கடை போட்டு, ஒரு நாளாவது நிம்மதியாக சாப்பிட்டு, தூங்கி விட மாட்டோமா என ஏக்கத்தில் இருப்பவர்களை, நாம்தானே ஆதரிக்க வேண்டும். இந்த பதிவை ஷேர் பண்ணுங்க. அதே போல, ஷேர் மட்டும் பண்ணாமல், நீங்களும் இது போன்ற ஒரு கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்குங்க. சிறு துளி பெருவெள்ளம் அல்லவா.
News October 15, 2025
தங்கம் விலை.. HAPPY NEWS

2 வாரங்களாக காலை, மாலை என போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்த தங்கம் <<18009956>>இன்று மாலை<<>> நேர வர்த்தகத்தில் மாற்றமின்றி விற்பனையாகிறது. கடந்த சில நாள்களுடன் ஒப்பிடும்போது விலை உயர்வு அளவும் இன்று குறைந்துள்ளது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, <<18013221>>பங்குச்சந்தை உயர்வு<<>>, உலக சந்தையிலும் தங்கம் விலை பெரிதாக மாறாததே விலை மாற்றமின்றி தொடர காரணம் என்றனர். இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் விலை சற்று குறையுமாம்.
News October 15, 2025
எடப்பாடி அல்ல ‘பொய்’பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி

சட்டசபையில் EPS முழுக்க பொய்யை மட்டுமே பேசியதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என EPS கனவு காண்பதாக விமர்சித்துள்ளார். விஜய்யின் எல்லா கூட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக கூறிய ரகுபதி, எத்தனை கூட்டணி அமைந்தாலும் திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.