News April 4, 2025

வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம்: மோடி

image

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

நீங்க என்ன Resolution எடுக்க போறீங்க?

image

இந்த வருஷம் போயிடுச்சு, ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா Comeback கொடுத்தே ஆகணும் என ஒவ்வொரு புத்தாண்டிலும் ஏதாவது ஒரு Resolution-ஐ எடுப்போம். அதை Follow பண்றோமோ இல்லையோ, கண்டிப்பாக ஏதோ ஒரு Resolution-ஐ எடுத்தே தீருவோம். அப்படி நாம எல்லோரும் பொதுவா எடுக்கும் சில Resolution-களை மேலே பட்டியலிட்டுள்ளோம். நீங்க இந்த வருஷம் எடுக்குற Resolution என்ன.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க?

News December 31, 2025

இன்றிரவு இந்த விஷயத்தில் கவனமா இருங்க!

image

இன்று இரவு இளைஞர்களை கையிலேயே பிடிக்க முடியாது எனலாம். புது வருடப்பிறப்பை முன்னிட்டு, கூட்டம் கூட்டமாக வண்டியில் ரவுண்ட்ஸ் அடிப்பதும், ஆடிப்பாடி கொண்டாடுவதும் என ஆனந்தமாக இருப்பார்கள், தவறில்லை. ஆனால், சந்தோஷம் என்ற பெயரில் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி விபத்துக்களில் சிக்குவது வேண்டாமே. நன்றாக மனதில் வைத்து கொள்ளுங்கள் எப்போதும் உங்களுக்காக வீட்டில் ஒரு உயிர் காத்துக் கொண்டிருக்கும். SHARE IT.

News December 31, 2025

சொத்துப் பத்திரம் தொலைந்துவிட்டதா?

image

வீடு (அ) நிலத்தின் பத்திரம் ஒருவேளை தொலைந்துவிட்டால் முதலில் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்துவிட்டு, பத்திரிகையில் விளம்பரமும் கொடுக்க வேண்டும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் போலீசிடம் NOT TRACEBLE என்ற சான்றை பெற்று நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று பெற வேண்டும். பின்னர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!