News April 4, 2025
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம்: மோடி

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 28, 2026
வேண்டுமென்றே திட்டமிட்டு தடை: நிர்மல் குமார்

தவெகவுக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அனுமதி மறுக்கப்படுவதாக CTR நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். செயலி மூலம் அனுமதி கோரினால், கேட்கப்பட்ட நேரம் கடந்த பின்னர் அனுமதி தருவதாக சாடினார். பெரும்பாலான அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் தங்களது நிர்வாகிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றார். மேலும், திமுகவுக்கு சாதகமான அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
News March 28, 2026
படிக்காதவர்களுக்கும் அரசு வேலை: சீமான்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சீமான் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு & வருவாயை உயர்த்துவதாக தெரிவித்தார். நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவந்து அனைவருக்கும் அரசு வேலை தருவோம் என்று கூறினார். மேலும், படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றார். <<-se>>#TNELECTION2026<<>>
News March 28, 2026
தவெகவுடன் கூட்டணி.. முடிவை கூறினார்

அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் NDA-க்கும் தங்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், தவெக அணுகினால் அவர்களுடனான கூட்டணி குறித்து சிந்திப்போம் எனவும் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும், தென் தமிழகத்தில் 50-60 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் கூட பெறாது என்றும் தெரிவித்தார்.


