News October 4, 2025

கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விசாரணை

image

கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வரிசையாக சென்றது சர்ச்சையானது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர். கூட்ட நெரிசல் குறித்து ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தது யார்? எத்தனை மணிக்கு அழைப்புகள் வந்தன என்று போலீசார் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Similar News

News October 4, 2025

ரோபோ சங்கரின் மகள் உருக்கம்

image

ரோபோ சங்கரின் இறப்புக்கு பிறகு முதல்முறையாக மீடியாவை சந்தித்த அவரது மகள் இந்திரஜா உருக்கமாக பேசியுள்ளார். ‘மக்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. அப்பாவின் பாதையில் தொடர்வோம். அப்பாவிற்காக அன்பை வெளிப்படுத்தவே அவரது இறுதி ஊர்வலத்தில் அம்மா நடனமாடினார். அதனை புரிந்து கொள்ளாதவர்கள் தான் அம்மாவை விமர்சித்தனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

News October 4, 2025

சோதனையிலும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் கே.எல்.ராகுல் அவுட் ஆனார். இதன்மூலம், ஒரே ஆண்டில் சதம் அடித்ததும் இருமுறை அவுட் ஆன வீரர் என்ற ரெக்கார்டை படைத்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் அவர் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் தோன்றிய 1877 முதல், இதுவரை யாரும் ஒரே ஆண்டில் இருமுறை 100 ரன்னில் அவுட் ஆனது இல்லை.

News October 4, 2025

இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!

image

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டில் சரியான முகவரி இருக்கிறதா என சரிபார்ப்பது நல்லது. அதில், முரண்பாடு இருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது சிக்கல் வரும். குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் விசாரணையில் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பத்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. SHARE

error: Content is protected !!