News March 30, 2024
பாஜகவில் கரைந்த அம்பேத்கரின் கட்சி

1956இல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக “இந்திய குடியரசுக் கட்சி” தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் கட்சி உருவாவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அதன்பிறகு அவரது ஆதாரவாளர்கள் அக்கட்சியை உருவாக்கி, பட்டியலின மக்களின் உரிமைகளை அரசியல் ரீதியாக மீட்டனர். ஆனால், ஒரு காலகட்டத்திற்கு பிறகு அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. தற்போது அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை என அத்வாலே குமுறுகிறார்.
Similar News
News January 13, 2026
ELECTION: மீண்டும் கோவையில் களமிறங்குகிறாரா கமல்?

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாம். கடந்த முறை போலவே கமல்ஹாசன் மீண்டும் கோவை தொகுதியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், மநீம வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்கின்றனர் திமுகவினர்.
News January 13, 2026
ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மர்ம கோயில்!

ம.பி.,யில் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் கோட்டையில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் ஒன்று உள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மகர சங்கராந்திக்கு மட்டும் திறக்கப்படும். இங்கு நிரந்தர சிலைகள் இல்லை. இந்த கோயில் அமைந்துள்ள கோட்டையில் சீல் வைக்கப்பட்ட பல ரகசிய சுரங்கங்கள் உள்ளன. இரவு நேரங்களில் தாந்திரீக சடங்குகளை செய்ய பலர் இக்கோட்டைக்கு செல்வதாக கூறப்படுவதால் மர்மமான கோயிலாக இது உள்ளது.
News January 13, 2026
இனி பாகிஸ்தானை தொட்டால் 3 நாடுகள் தாக்கும்!

<<17745829>>பாகிஸ்தான் – சவுதி<<>> இடையிலான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இணைய துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஏதேனும் ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற 2 நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்பட்டு, 3 நாடுகளும் இணைந்து எதிர் தாக்குதலில் ஈடுபடும்.


