News April 8, 2025
அம்பானிக்கு சிக்கல்… ₹15,000 கோடி பங்களா என்னாகும்?

மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ₹15,000 கோடி மதிப்புள்ள ‘ஆன்டிலியா’ பங்களாவிற்கு சிக்கல் எழுந்துள்ளது. வக்ஃப் வாரிய நிலத்தை வாங்கிய அவர், அதில் பங்களா கட்டி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது வக்ஃப் மசோதா சட்டமாகியுள்ளதால், அதன்படி வக்ஃப் நிலத்தை தனியாருக்கு விற்க முடியாது. வழக்கு அம்பானிக்கு எதிராக திரும்பினால், அவர் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை வரும்.
Similar News
News April 17, 2025
முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 17, 2025
விஜய் கட்சியில் நானா? என்ன ஆள விடுங்க சாமி!!

சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்த நிலையில், மகன் சிபிராஜ் தவெகவில் இணையவுள்ளதாக பேச்சு அடிப்பட்டது. அதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர், நான் விஜய்யின் தீவிர ரசிகன், அவ்வளவு தான்.. தவெகவில் இணையப் போவதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி, அதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; எனக்கு அரசியல் ஆர்வம் & அறிவு கிடையாது என கூறியுள்ளார்
News April 17, 2025
சஞ்சு மட்டும் களத்தில் இருந்திருந்தால்..

DC அணிக்கு எதிரான போட்டியில் RR தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன், பாதியிலேயே, மைதானத்தில் இருந்து வெளியே போனதுதான். 31 ரன்கள் எடுத்திருந்தபோது retd hurt முறையில் வெளியேறாமல் இருந்திருந்தால், ரன் குவிப்பில் ஈடுபட்டிருப்பார். இதனால், சூப்பர் ஓவர் வந்திருக்க வாய்ப்பில்லை; ராஜஸ்தானும் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.