News April 8, 2025

அம்பானிக்கு சிக்கல்… ₹15,000 கோடி பங்களா என்னாகும்?

image

மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ₹15,000 கோடி மதிப்புள்ள ‘ஆன்டிலியா’ பங்களாவிற்கு சிக்கல் எழுந்துள்ளது. வக்ஃப் வாரிய நிலத்தை வாங்கிய அவர், அதில் பங்களா கட்டி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது வக்ஃப் மசோதா சட்டமாகியுள்ளதால், அதன்படி வக்ஃப் நிலத்தை தனியாருக்கு விற்க முடியாது. வழக்கு அம்பானிக்கு எதிராக திரும்பினால், அவர் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை வரும்.

Similar News

News July 8, 2025

பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்!

image

➤<<16987572>>கடலூர் <<>>லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சோகம்.. 3 மாணவர்கள் மரணம்
➤கடலூர் பள்ளி வேன் விபத்து.. <<16988553>>CM ஸ்டாலின் <<>>& இபிஎஸ் இரங்கல்
➤<<16987858>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹400 உயர்வு
➤நாடு முழுவதும் <<16987412>>நாளை <<>>பொது வேலைநிறுத்தம்.. பஸ் சேவை பாதிப்பு ➤RCB வீரர்<<16987106>> யஷ்<<>> தயாள் மீது FIR ➤<<16987497>>சாதி <<>>குறித்த பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

News July 8, 2025

யாரும் நெருங்க முடியாத கங்குலியின் ரெக்கார்ட்!

image

இன்று ‘தாதா’ <<16986348>>கங்குலியின் <<>>பிறந்தநாள். ODI-ல் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் செளரவ் கங்குலி தான். 1997-ல் சகாரா கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வரிசையாக 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் கங்குலி. இந்த ரெக்கார்டை இன்று வரையிலும் யாராலும் வீழ்த்த முடியவில்லை. இது மட்டுமின்றி, ODI-ல் 11,363 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்த 2-வது இந்தியரும் ‘தாதா’ தான்.

News July 8, 2025

வேன் விபத்தில் அக்கா – தம்பி உயிரிழந்த சோகம்

image

கடலூர், செம்மங்குப்பத்தில் <<16987835>>ரயில்<<>> மோதி பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் சாருமதி (15), செழியன் (14) & விமலேஷ் (10) ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் சாருமதி & செழியன் ஆகிய இருவரும் அக்கா – தம்பி என்பது சோகத்தின் உச்சம். இரு குழந்தைகளையும் இழந்த அவர்களது பெற்றோர் ஹாஸ்பிடலில் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. மேலும், விஷ்வேஸ் மற்றும் டிரைவர் சங்கர் சிகிச்சையில் உள்ளனர்.

error: Content is protected !!