News April 26, 2024
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘அமரன்’

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் உருவாக்கி வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
சீனாவுக்கு செக் வைக்க எல்லையில் விமானப்படை தளம்

சீனாவிற்கு செக் வைக்கும் விதமாக, சர்வதேச எல்லைக்கோட்டில் இருந்து 35 கி.மீ., தொலைவில், நியோமோ என்ற இந்திய விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13,700 அடி உயரத்தில், லடாக்கில் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான விமானப்படை தளம் இதுவாகும். 2.7 கி.மீ., நீளமுள்ள இதன் ஓடுபாதையில் விமானங்கள் எளிதாக தரையிறங்க முடியும். இதன்மூலம், படைகள், ராணுவ தளவாடங்கள், விரைவாக குவிக்க முடியும்.
News November 14, 2025
41 பேரை கொன்றவன் தலைவனா? யுகபாரதி

திமுக சார்பில் சென்னையில் அறிவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தெருவில் கூட்டத்தை கூட்டி 41 பேரை கொன்றவன் தலைவனா என விஜய்யை மறைமுகமாக சாடினார். 1950-களில் அண்ணா கூட்டம் நடத்திய போது, பணம் வசூல் செய்து கூட்டத்தை நடத்திய கிட்டப்பாவிற்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. அதை புரிந்து கொண்ட அண்ணா, அவரை MLA ஆக்கினார், அவர் தான் தலைவர் என்றும் யுகபாரதி கூறினார்.
News November 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 519 ▶குறள்: வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. ▶பொருள்: தன் பதவியில் செயல்திறன் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால், அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீங்குவாள்.


