News March 18, 2025
அம்மாடியோவ் 52 முறை…. தங்க கடத்தல் வழக்கில் திருப்பம்!

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ரன்யா ராவ் 2 ஆண்டுகளில் 52 முறை துபாய் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது நண்பரும் நடிகருமான தருண் ராஜுடன் 26 முறை துபாய் சென்று தங்கம் கடத்தியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 21, 2025
இதை செய்ய உங்கள் நாள் சிறப்பாகும்

நமது வாழ்வில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காலை எழுந்தவுடன் அதை நாம் எவ்வாறு அணுகுகிறோமோ அதை வைத்தே அன்றைய பொழுதானது நல்லதொரு பொழுதாக அமைகிறது. அப்படி எழுந்தவுடன் அவசியம் செய்ய வேண்டிய சில பழக்கங்களை மேலே புகைப்படங்களில் பார்க்கலாம்.
News September 21, 2025
GST 2.0 என்பது ஒரு புரட்சி: நிர்மலா சீதாராமன்

GST 2.0 என்பது சீர்திருத்தம் அல்ல, புரட்சி என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், தீப்பெட்டி தொழிலில் அச்சாணிகளாக பெண்கள் திகழ்வதால், அவர்களின் நலன்களுக்காக திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 375 பொருள்களுக்கு 10% GST வரியை குறைத்து, PM மோடி சார்பில் தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
2027-ல் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை

மும்பை – அகமதாபாத் இடையே 2027 டிசம்பரில் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் வருகையின் மூலம், 9 மணி நேரமாக இருக்கும் பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் எனவும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பதிவு செய்ய வெண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.