News August 24, 2024

என்னிடம் போலீஸ் விசாரணையா?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி மொட்டை கிருஷ்ணனுக்கு தஞ்சம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நெல்சனிடம் இன்று விசாரணை நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள நெல்சன், தன்னை போலீஸ் விசாரிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 27, 2025

Cinema Roundup: தீபிகாவிற்கு ₹12 கோடி நஷ்டம்

image

*தனுஷின் ‘தேரே இஸ்க் மெயின்’ படம் ப்ரீபுக்கிங்கில் ₹3.8 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *சீரியல்களில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம். *தெலுங்கில் ‘MAD’ படத்தை இயக்கிய கல்யாண் சங்கர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல். *தீபிகா படுகோனின் 82°E என்ற சரும பராமரிப்பு பிராண்ட் 2024-25 நிதியாண்டில் ₹12.26 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

News November 27, 2025

உலகக் கோப்பையை வென்றார் உஸ்பெகிஸ்தான் வீரர்

image

உஸ்பெகிஸ்தான் ஜவோகிர் சிண்டரோவ், FIDE உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவின் வெய் யி உடனான 2-வது டை-ப்ரேக்கில் 1.5-05 என்ற கணக்கில் ஜவோகிர் வென்றார். இதன் மூலம் இளம் வயதில் (19) செஸ் உலகக் கோப்பையை தட்டிய வீரராக சாதனை படைத்துள்ளார். இவருக்கு ₹1.07 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த போட்டியில் பங்கேற்ற 24 இந்திய வீரர்களில், ஒருவர் கூட தகுதி பெறவில்லை.

News November 27, 2025

பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லை சுருங்குகிறது: அகிலேஷ்

image

அருணாச்சல் தங்களது பகுதி என <<18374689>>சீனா<<>> கூறிவரும் நிலையில், இந்தியாவின் எல்லைகள் குறித்து அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் அசல் மற்றும் தற்போதைய எல்லையை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும், பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லை சுருங்கி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், எல்லைகளை காப்பதை விடுத்து, போலி செய்திகள், பிரசாரங்களை அரசாங்கம் நம்பியிருப்பதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!