News March 22, 2025

எப்பவும் ‘நைட்கவுன்’… கடுப்பான இளம்பெண்

image

மாமியார் வீட்டில் பல பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருவதை நாம் பார்த்திருப்போம். குஜராத்தில் அப்படி இன்னல்களை சந்தித்த 21 வயது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாள் முழுவதும் நைட் கவுன் மட்டுமே அணிய வேண்டும் என கணவரின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், தூங்குவதற்கு முன்பு கணவர் கால் அமுக்கி விடச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

Similar News

News March 23, 2025

பெண் டாக்டர் சுட்டுக்கொலை!

image

பீகாரில் பெண் டாக்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள ஏசியா தனியார் ஹாஸ்பிடல் இயக்குநராக இருக்கும் ஷுர்பி ராஜை (35), மர்மநபர்கள் 6 பேர் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். நோயாளிகளை போல நடித்து அவர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

News March 23, 2025

கொழும்புவின் அழகில் மெய்மறந்த கீர்த்தி சுரேஷ்

image

நடிகை கீர்த்தி சுரேஷ், அண்மையில் இலங்கை சென்றிருந்தார். அப்போது கொழும்பு நகரின் அழகை ரசித்து, அதைப் பற்றி தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்த அவரை, அங்குள்ள ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அவர் கொழும்பில் ஆட்டோவிலும் பயணித்து என்ஜாய் பண்ணியுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பிய கீர்த்தி, கொழும்புக்கு மீண்டும் எப்போது செல்வோம் என காத்திருப்பதாக கூறியுள்ளார்.

News March 23, 2025

இரவு 10 மணி வரை மழை கொட்டும்

image

தமிழகத்தின் 9 மாவட்டங்களில், இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஒன்றிரண்டு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும்.

error: Content is protected !!